ஆப்நகரம்

தங்கை பாசம் இருக்கலாம்.. அதற்காக கண்ணை மூடிக்கொண்டா பைக் ஓட்டுவது? வானத்தைப்போல சீரியல் விமர்சனம்

வானத்தை போல சீரியலில் இன்று சின்ராசு பிறந்தநாளை கொண்டாட, அவருக்கு தங்கை துளசி ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து இருக்கிறார்.

Samayam Tamil 30 Dec 2020, 11:57 pm
துளசிக்கு பெண் பார்க்க வேண்டும் என சின்ராசின் மாமா மற்றும் இன்னொருவர் வந்து அவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர் உங்க தங்கைக்கு கல்யாணம் ஆனால் சொத்தில் பாதியை பிரித்து கொடுப்பியா என கேட்டார். அதற்கு சற்று நேரம் யோசித்த சின்ராசு, பிரித்து எல்லாம் கொடுக்கமாட்டேன், அப்படியே முழுதாக கொடுத்துவிடுவேன் என கூறினார்.
Samayam Tamil Vanathai Pola Serial (Pic Credits: Sun TV)


அதை கேட்ட துளசி அவரிடம் சண்டை போடுகிறார். சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு நீ என்ன காசிக்கு போக போறியா என கேட்கிறார். அவர்கள் இப்படி பாசமாக சண்டை போட்டுக்கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அவர்களின் அத்தை அவர்கள் பாசத்தை பார்த்து திகைக்கிறார். தனது கணவர் சொத்தை வாங்கி வரும் படி அனுப்பியதை நினைத்து பார்க்கிறார்.

மறுநாள் சின்ராசுக்கு பிறந்தநாள் என்பதால் அவர் காலையில் எழுந்ததும் முதலில் தங்கையின் முகத்தில் தான் விழிக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் காலையிலேயே கோவிலுக்கு சென்றுவிட்டார் என சொல்கிறார்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டே பைக்கை ஒட்டிக்கொண்டு செல்கிறார். சென்டிமென்டன் இருக்கலாம் அதற்காக கண்ணை மூடி கொண்டு பைக் ஓட்டும் அளவுக்கு இருப்பது தவறு என பார்க்கும் நமக்கே தோன்றும்.

ஒருவழியாக ரோட்டில் எந்த விபத்தும் செய்யாமல் கோவிலுக்கு வந்தடைகின்றனர். அங்கு கோவிலில் தங்கை துளசி சின்ராசுக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறார். அவரது புகைப்படம் வைத்த செயின் சின்ராசு கழுத்திலும், சின்ராசு புகைப்படம் இருப்பது போல செயின் இவரது கழுத்திலும் போட்டுக்கொள்கின்றனர்.

அதன் பின் நேராக மாமா வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு ஆசீர்வாதம் பெறலாம் என அவர்கள் சென்றாலும் மாமாவின் மனைவி இவர்களை அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசு முகத்தை காட்டுகிறார். அந்த செயினை பற்றியும் அவர் கிண்டல் செய்து பேசுகிறார்.

இனி என்ன நடக்கும்.. நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி