ஆப்நகரம்

பூச்சி மருந்து குடித்துவிட்ட ராஜ பாண்டி: வானத்தைப்போல சீரியலில் அதிர்ச்சி திருப்பம்

சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் இன்று ராஜபாண்டி தான் நிச்சயம் செய்த துளசியை இனி திருமணம் செய்ய வாய்ப்பில்லை என அறிந்து விரக்தியில் பூச்சி மருந்து குடித்துவிடுகிறார்.

Samayam Tamil 24 Jun 2021, 12:14 am
ராஜபாண்டி மில் ஓனர் அழைத்தார் என பார்ட்டிக்கு சென்று அங்கு அவர் கொடுத்த போதைப்பொருள் கலந்த ஜூஸை குடித்துவிடுகிறார். அதன் பின் லீஸ் பணத்தை மில் ஓனரிடத்தில் கொடுத்துவிட்டு வருகிறார்.
Samayam Tamil Vanathaipola serial


ராஜபாண்டி போதையில் தள்ளாடுவதை பார்த்து சின்ராசு மற்றும் குடும்பம் கடும் அதிர்ச்சி அடைகிறது. அதனால் அவர் நிச்சயம் செய்த துளசியை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த மில் ஓனர் லீஸ் பணத்தை தரவே இல்லை என கூறிவிட்டதால் அந்த பணமும் இழந்து நிற்கிறார் ராஜபாண்டி.

நான் குடிக்கவே இல்லை என துளசி மீது வைத்திருக்கும் பாசத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறார் ராஜபாண்டி. தான் குடிக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு தான் இந்த வீட்டில் வாசப்படி மிதிப்பேன் என கூறிவிட்டு கிளம்புகிறார் ராஜபாண்டி.

மறுபுறம் வில்லிகளான வெற்றியின் சித்தி மற்றும் அவரது மகள் இருவரும் ராஜபாண்டியை சிக்கவைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். துளசியை எப்படியாவது வெற்றிக்கு கட்டிவைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வில்லத்தனமாகி யோசிக்கின்றனர்.

அதற்கு பிறகு ராஜபாண்டியிடம் பணத்தை ஏமாற்றிய மில் ஓனர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பேங்கிற்கு போகிறார். அந்த பணக்கட்டு மீது கோவிலில் வைத்த மஞ்சள் குங்குமம் அப்படியே இருப்பதை பார்த்து வெற்றி அது ராஜபாண்டியின் பணம் என கண்டுபிடிக்கிறார்.

போலீசை கூப்பிடுவதாக வெற்றி கூறவே மில் ஓனர் தான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டதாக கூறுகிறார். பணத்தை கொடுத்துவிட்டு அவர் சென்றுவிடுகிறார்.

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ! வளைகாப்பு போட்டோ இதோ
ராஜபாண்டி சின்ராசு வீட்டில் இருந்து வயலுக்கு செல்கிறார். அங்கு அவர் கொண்டு வந்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிடுகிறார். அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னுடன் சேர்நது வாழ வேண்டும் என மிகவும் எமோஷ்னலாக பேசுகிறார் அவர்.

அதன் பின் அவரே நடந்து சென்று அப்பா மற்றும் அம்மாவிடம் பேசுகிறார். 'இனி நான் குடிக்கவே மாட்டேன். இது தான் கடைசி குடி. துளசியை வேறு நல்ல மாப்பிள்ளைக்கு காட்டிக்கொடுத்து விடுங்கள். நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன்' என கூறி சரிந்து விழுகிறார். அவரை அருகில் இருப்பவர்கள் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல தூக்கிச் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

ராஜபாண்டி உயிர் பிழைப்பானா என்பது நாளை தான் தெரியவரும்.

அடுத்த செய்தி