ஆப்நகரம்

அக்கா வாழ்க்கைக்காக காலில் விழுந்து கெஞ்சிய வேலன்! கொலை செய்த திவாகர் சிக்குவாரா?

வேலைக்காரன் சீரியலில் இன்று வேலன் காலில் விழுந்து கெஞ்சி அக்கா கணவர் பசுபதியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

Samayam Tamil 15 Dec 2020, 7:32 pm
வேலன் தன் அவமானத்தையும் பொருட்படுத்தாமல் நேராக சென்று பசுபதியின் காலில் விழுந்துவிடுகிறார். நான் செய்தது தவறு தான். அப்படி பேசி இருக்க கூடாது என கூறி மன்னிப்பு கேட்கிறார். அவரும் வீம்பாக காலை செருப்போடு எடுத்து வேலன் தோள் மீது வைத்து அசிங்கப்படுத்துகிறார். அவர் மீண்டும் வீட்டுக்கு செல்லும் போது அம்மா அவரது சட்டையை பார்த்து கண்டுபிடித்துவிடுகிறார். எந்த தவறும் செய்யாத நீ ஏன் இப்படி செய்ய வேண்டும் என உடன் இருப்பவரே ஆதங்கத்துடன் கேட்டார்.
Samayam Tamil Velaikkaran serial (Pic Credits: Hotstar)


வள்ளி அவரது தாத்தாவுடன் இந்த ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவர் முருகனுக்கு ஒரு பாடலை பாடி உருக்கமாக பிரார்த்தனை செய்கிறார். அதை கேட்டு சுற்றி இருப்பவர்களும் அவரை பாராட்டுகின்றனர். அந்த கோவில் வழியாக செல்லும்போது ராகவனின் கார் பஞ்சர் ஆகிவிடுகிறது. அப்போது பாடலை கேட்டு ராகவன், 'இது அந்த குரல் போல இருக்கிறதே' என எண்ணி கோவில் உள்ளே செல்கிறார்.

குரலையும் ரெக்கார்டு செய்து கொள்கிறார். ஆனால் பாடலை பாடியது யார் என தேடி அலைகிறார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுபுறம் ராகவனின் தம்பி திவாகர் பேக்டரிக்கு செல்கிறார். அங்கு அவர் தான் திருட்டுத்தனமாக செய்யும் போதைப்பொருள் கடத்தல் பற்றி கூட்டாளியுடன் பேசுகிறார். அவர் அங்கு பணியாற்றும் நபர். இந்த விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி கேட்கிறார்.

அதன் பின் கோவிந்தராஜன் என்ற வயதான ஒருவர் வந்து திவகரிடம் 'இங்கு சில தவறான விஷயங்கள் நடக்கிறது' என இந்த போதை பொருள் கடத்தல் பற்றி சொல்கிறார். அவரிடம் நல்லவர் போல பேசும் திவாகர், அதன் பின் கரெண்ட் ஷாக் மூலம் அவரை கொலை செய்கிறார். அது விபத்து என்பது போல மற்றவர்களும் நினைத்துக்கொள்கின்றனர்.

பணியாளர்கள் சிலர் இது பற்றி வீட்டிற்கு வந்து அம்மா விசாலாட்சியிடம் தகவலை சொல்கின்றனர். இறந்தா கோவிந்தராஜனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது என்றும், ஒரு வருடத்தில் ஓய்வு பெற இருந்தார் என்றும் தெரிகின்றனர். அதை கேற்று கலக்கம் அடைந்த அவர் கோவிந்தராஜின் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய உதவியை தான் செய்வேன் என சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

அப்போது தான் திவாகர் வீட்டிற்கு திரும்பி வருகிறார், அவரை கோபத்துடன் அம்மா அழைக்கும்போது சரியாக எபிசோடு முடிக்கப்படுகிறது. எதற்காக அப்படி கோபத்துடன் அழைத்தார், உண்மையை கண்டுபிடித்துவிட்டாரோ என்பது நாளை தான் தெரியவரும்.

அடுத்த செய்தி