ஆப்நகரம்

காலையிலேயே சரக்கா? என்ன பண்றது ? போர் அடிக்குதே - வி ஜே அஞ்சனா

விஜே அஞ்சனா வீட்டில் கணவருடன் நேரத்தை செலவிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 10:00 am
கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையின் நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தொகுப்பாளர் வி ஜே அஞ்சனா, தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு, தான் ரசித்த ஃபன்னி தருணங்களை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil anjana and chandran


நீல நிற உடையில் வீட்டில் தனித்திருக்கும் அவதியை இந்த புகைப்படத்தில் பதிவு செய்துள்ளனர் போலும். தலையை கோதிவிட்டபடி எங்கேயே பார்த்துக் கொண்டிருக்கிறார் அஞ்சனா.

View this post on Instagram A post shared by Anjana Rangan (@anjana_rangan) on Mar 24, 2020 at 8:46pm PDT

இன்னொரு புகைப்படத்தில் தன் கணவர் சந்திரமௌலியுடன் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். சந்திரன் கண்ணாடி அணிந்திருக்கிறார். இதுகுறித்து அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.

அவரை கண்ணாடி அணிய வைத்தது நான்தான். ஹாலிடேஸ் என்கிற ஃபீலுக்காக அப்படி செய்தேன். புரிகிறது... முட்டாள்தனம்தான்.. வேற என்ன செய்றது போர் அடிக்குதே.. என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram A post shared by Anjana Rangan (@anjana_rangan) on Mar 24, 2020 at 3:03am PDT

இந்நிலையில் இதே புகைப்படத்தில் கமெண்ட் செய்துள்ள சந்திரன், இந்த ஹேஸ்டேக் என்னை எச்சரிக்கை செய்வதற்காகவா என கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனா கிட்டத்தட்ட அதற்காகத்தான் என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஒருவர் காலைலயே சரக்கா என கேள்வி கேட்டுள்ளார். அது லிம்கா முருகேசா என பதிலளித்துள்ளார் சந்திரன். அதாவது அது லிம்கா என்கிற குளிர்பானம் என்பதைதான் அப்படி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி