ஆப்நகரம்

குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் வெளியேறியது ஏன்.?: காரணத்தை போட்டுடைத்த ரக்‌ஷன்.!

குக் வித் கோமாளி 3 ஃபைனல்ஸில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் ரக்‌ஷன்.

Samayam Tamil 16 Aug 2022, 6:41 pm
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் ரக்ஷன்.
Samayam Tamil ரக்ஷன்
ரக்ஷன்


விஜய் டிவியின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரக்ஷன், மக்களின் பேவரைட் ஆங்கராக உருவெடுத்தார். விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், இது வரை நடந்த 3 சீசன்களுக்கும் ரக்‌ஷன் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனல்ஸில் ரக்‌ஷன் கலந்து கொள்ளவில்லை. இது பெரிய குறையாகவே பார்க்கப்பட்டது. போட்டியாளர்கள், கோமாளிகள், ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்தனர். ஆனால் ரக்‌ஷன் கலந்து கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம் என தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் ரக்ஷனிடம் இதுகுறித்து கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Baakiyalakshmi Serial: சைலண்டாக சம்பவம் செய்த பாக்யா: மிரண்டு போன குடும்பம்.!

அடுத்த செய்தி