பிக் பாஸ் 4ன் மூலம் மிகப்பெரிய அளவும் பிரபலமடைந்தவர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான். அவர் அதற்கு முன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று கொடுத்திருப்பது பிக் பாஸ் தான். பிக் பாஸ் வீட்டில் அவர் ஏற்படுத்திய சில சர்ச்சைகள் தற்போதும் அவரை பின்தொடர்ந்து வருகிறது. சனம் ஷெட்டி ஜெயித்த அழகி போட்டி டுபாக்கூர் எனவும் அதை தான் வெளியில் வந்து நிரூபிப்பதாகவும் பாலாஜி கூறி இருந்தார். அது பற்றி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கேல் என்பவர் கூறி இருந்தார்.
அதன் படி சமீபத்தில் அவர் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அது பாலாஜியின் வீட்டுக்கும், வாட்ஸப்புக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கான screenshotஐயும் ஜோ மைக்கேல் வெளியிட்டு இருந்தார்.
இந்த சர்ச்சைக்கு தற்போதைக்கு முடிவு கிடைக்கும் நிலை இல்லை என அனைவரும் பேசும் அளவும் தற்போது ஜோ மைக்கேல் ஒரு விஷயத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தான் பாலாஜி உடன் போனில் பேசிய விஷயத்தை ஆடியோவாக வெளியிடப்போவதாக மறைமுகமாக கூறியுள்ளார் அவர். எதனை பேர் அதற்காக காத்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார்.
"உள்ள சொன்னதை prove பண்ணா தப்பு இல்லை.. இதுல English பழமொழி வேற.." என மற்றொரு ட்விட்டில் பாலாஜியை ஜோ மைக்கேல் விமர்சித்து இருக்கிறார்.
அதன் படி சமீபத்தில் அவர் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அது பாலாஜியின் வீட்டுக்கும், வாட்ஸப்புக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கான screenshotஐயும் ஜோ மைக்கேல் வெளியிட்டு இருந்தார்.
இந்த சர்ச்சைக்கு தற்போதைக்கு முடிவு கிடைக்கும் நிலை இல்லை என அனைவரும் பேசும் அளவும் தற்போது ஜோ மைக்கேல் ஒரு விஷயத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தான் பாலாஜி உடன் போனில் பேசிய விஷயத்தை ஆடியோவாக வெளியிடப்போவதாக மறைமுகமாக கூறியுள்ளார் அவர். எதனை பேர் அதற்காக காத்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார்.
"உள்ள சொன்னதை prove பண்ணா தப்பு இல்லை.. இதுல English பழமொழி வேற.." என மற்றொரு ட்விட்டில் பாலாஜியை ஜோ மைக்கேல் விமர்சித்து இருக்கிறார்.