ஆப்நகரம்

ஜெனி செழியன் இருவரின் நலங்கு விழாவில் கலந்துக்கொள்வாரா ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி அப்டேட்

ஜெனி குடும்பத்தினர் மீது ஈஸ்வரி கோபமாக இருப்பதால் ஜெனி செழியன் இருவரின் நலங்கு விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. விழாவில் பங்குபெற்று இருவரையும் ஆசீர்வதிப்பாரா?

Samayam Tamil 1 Dec 2020, 1:14 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி குடும்பத்தினரும் செழியன் வீட்டிலேயே தங்குகிறார்கள். செழியன் ஜெனி இருவரும் பார்த்துப் பேசிக் கொள்ள வேண்டுமென ஒருவருக்கொருவர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒருவழியாக சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது ஈஸ்வரி வந்துவிடுகிறார். இருவரையும் பார்த்து திட்டிவிட்டு அவரது அறைக்கு செல்லும்படி கூறுகிறார்.
Samayam Tamil Baakiyalakshmi Serial


மறுபடியும் மேலே வந்து செழியன் ஜெனியிடம் பேசி கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியலட்சுமி, அவர்களை தேடி மேலே வந்துவிடுகிறார். அவர் ஜெனி, செழியன் இருவரிடமும் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என தனது அறிவுரைகளை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். பாக்கியலட்சும் நான் ஜெனிக்கே எப்பொழுதும் ஆதரவாக இருப்பேன் என பாசமாக பேசி முத்தம் தருகிறார். அப்போது தற்ச்செயலாக வந்த ஜோசப் இதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

இதையடுத்து ராமமூர்த்தி, எழிலன் ஜெனியின் உறவினர் என மூவரும் சீட்டு ஆடி கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனியின் உறவினர் ராமமூர்த்தியை தவறாக பேசியதில் இருவருக்கும் இடையில் பெரிதாக சண்டை ஏற்படுகிறது. அங்கு குடும்பத்தினர் அனைவரும் வந்து விட, ஈஸ்வரி அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த திருமணம் நடைபெறும் என கோபமாக கூறிச் செல்கிறார்.

இந்த திருமணம் நடக்குமா நடக்காதா என அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்த திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என பாக்கியலட்சுமி ராமமூர்த்தியுடன் சென்று பேசுகிறார்.

அவர் கூறுவதால் நீங்கள் நேர்மையற்றவர் என்று ஆகிவிடாது. அவர் சொன்னதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என அவரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்று விடுகிறார் பாக்கியலட்சுமி. ஈஸ்வரியை சமாதானம் செய்ய எழிலன் பல முயற்சிகளை செய்கிறார்.

இரு குடும்பமும் ஓரளவிற்க்கு சமாதானமாகி விடுகிறார்கள். மறுநாள் செழியன் ஜெனி இருவருக்கும் நலங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அப்போது ஜெனியின் கழுத்திலிருந்த சிலுவையை பார்க்கிறார் ஈஸ்வரி. அந்த செயினை கழட்டி வைத்துவிட்டு எங்கள் குடும்ப பெண்ணாக வர வேண்டும் அப்போதுதான் திருமணம் நடைபெறுமென கண்டிப்பாக கூறிவிடுகிறார்.

ஜெனியும் திருமணம் நடைபெற வேண்டுமென செயினை கழட்டிவிட்டு வருகிறார். ஜெனி செழியன் இருவரும் நலங்கு செய்வதற்காக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து சொந்தங்களும் வந்து பங்கு பெறுகிறார்கள். ஆனால் ஈஸ்வரி நான் வரமாட்டேன் என பிடிவாதமாக அறைக்குள்ளே இருக்கிறார்.

அடுத்த செய்தி