ஆப்நகரம்

சரவணன் படிக்காதவர் என்ற உண்மை சந்தியாவுக்கு தெரிய வருமா?: ராஜா ராணி 2

சரவணன் தன்னை பற்றி பேச சந்தியா அதை கவனிக்காமல் இருந்துவிடுகிறார். சரவணன் படிக்காதவர் என்கிற உண்மை சந்தியாவுக்கு தெரிய வருமா?.

Samayam Tamil 26 Nov 2020, 4:42 pm
புதுப்பெண்ணை பார்க்க பக்கத்து வீட்டு பெண்கள் வருவதால் சந்தியாவை புடவை கட்டி தயாராக சொல்கிறார் சிவகாமி. புடவை கட்டத் தெரியாத சந்தியா தன் அண்ணிக்கு போன் செய்து பேச, அவரும் நான் உடனே வருகிறேன் என கிளம்புகிறார்.
Samayam Tamil sandhya


வெகுநேரமானதால் சிவகாமி வந்து கதவை தட்டுகிறார். சந்தியா கதவை திறக்க அவர் கையில் அடிபட்டிருப்பதை காட்டுகிறார். பிறகு சிவகாமியே சந்தியாவுக்கு புடவை கட்டிவிடுகிறார். சந்தியாவை பார்த்ததும் அந்த பெண்கள் சிவகாமியிடம் உன் மருமகள் அழகாக இருக்கிறார், ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்கிறார்கள்.

பிறகு ஜனனி அங்கு வருகிறார், அந்த பெண்கள் சந்தியாவிடம் உனக்கு சரவணனை பிடித்திருக்கிறதா என கேட்க, அதற்கு அவர் கணவனைப் பற்றி பெருமையாக பேசுகிறார். அவர்கள் அனைவரும் சென்றதும், ஜனனியிடம் சந்தியா பேசிக் கொண்டிருக்கிறார். ஜனனி அவருக்காக சமையல் குறிப்பு புத்தகத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்குச் செல்கிறார்.

பிறகு சந்தியா அந்த புத்தகத்தை தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சரவணன் சந்தியாவிடம் தன்னைப் பற்றி கூறிவிட வேண்டும் என, தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதில் இருந்து, படிக்காதது என தற்போது ஸ்வீட் கடை வைத்திருப்பது வரை அனைத்தையும் சொல்கிறார்.

ஆனால் அதை கவனிக்காமல் சந்தியா புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மயில் வந்து, சந்தியாவை சிவகாமி அழைப்பதாக கூட்டிச் செல்கிறார். எவ்வளவு நகை உன்னிடம் இருக்கிறது என சிவகாமி சந்தியாவிடம் கேட்க, மயில் ஒரு பெரிய பெட்டியை தூக்கி வருகிறார்.

அந்த பெட்டியை திறந்து பார்த்ததால் புத்தகமாக இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியில் கோபம் அடைகிறார் சிவகாமி. இது அனைத்தும் உன்னுடைய புத்தகம் தானா என சிவகாமி கோபத்தில் கேட்க, இது என் தந்தையுடையது, நான் அவரது நினைவாக வைத்து இருக்கிறேன் என கூறி சமாளித்து விடுகிறார்.

ஆனால் சந்தியா படித்த பெண் தான் என குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது. அதே போல், தன்னை படிக்காத பெண்ணாகத் தான் சரவணனிற்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது சந்தியாவுக்கும் தெரியாது.

முத்துராஜின் கால்களை பிடித்து சடங்கு செய்வாரா மாயன்?

அடுத்த செய்தி