ஆப்நகரம்

ரித்திக்காவை கல்யாணம் செய்து கொடுங்கள்.. பிரபல நடிகையின் வீட்டில் ரகளை செய்த ரசிகன்

சென்னை: நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொடுக்குமாறு ரகளை செய்த அவரது ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 11 May 2019, 3:22 pm
சென்னை: நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொடுக்குமாறு ரகளை செய்த அவரது ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Rithika (1)


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் நாயகனின் சஞ்சீவின் தங்கையாக நடித்து வருகின்றார் ரித்திகா. இவர சென்னையில் வடபழனியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

திருமணம் செய்து கொடுங்கள்:
இந்நிலையில் ரித்திகாவின் வீட்டிற்கு வந்த ஒரு இளைஞன், உங்கள் மகள் அருமையாக நடிக்கின்றார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது, நான் அவரை காதலிக்கின்றேன், ரித்திகாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என ரகளையில் ஈடுபட்டார்.

இளைஞனின் போக்கு சரியில்லை என நினைத்த ரித்திகாவின் தந்தை போலீஸுக்கு போன் செய்தார். தகவல் அறிந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரித்திகாவின் வீட்டுக்கு சென்று அந்த இளைஞரை விசாரித்தார்.

விசாரணையில் அந்த இளைஞனின் பெயர் பார்த்திபன் (24), கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அவர் கோவா செல்வதற்காக சென்னை வந்துள்ளார். விமானம் தவறவிட்ட அவர், ரித்திகாவின் முகவரியை தெரிந்து கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்று தகறாரில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பார்த்திபனை, அவரது பெற்றோரை நேரில் வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி