ஆப்நகரம்

Zee tamil: நாகுவின் தம்பியால் வந்த திருட்டுப்பழி.. திருமணத்தை நிறுத்த சொல்லும் வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்.!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

Samayam Tamil 4 Aug 2022, 6:25 pm
இந்த சீரியல் செந்தில் மற்றும் அமுதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் வடிவேலு கடன் தொல்லையால் அம்மாவிடம் சிதம்பரத்திடம் கேட்டு பணத்தை வாங்கித் தருமாறு கூறினார். ஆனால் சம்மந்தியிடம் பணத்தைக் கேட்க அன்னலட்சுமி தயங்கியதால் பணம் வாங்கித் தரவில்லை என்றால் வீட்டில் தொங்கி விடுவேன் என மிரட்டிய வடிவேலு நேராக சிதம்பரத்திடம் சென்று பணத்தை கேட்கிறான்.
Samayam Tamil அமுதாவும் அன்னலட்சுமியும்



ஆனால் சிதம்பரம் பணத்தை தர மறுக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு போன் கால் வர போன் பேச வெளியே சென்ற நேரத்தில் நாகுவின் தம்பி பணத்தை திருடி விடுகிறான். திரும்பி வந்து பார்த்த சிதம்பரம் பணம் காணவில்லை என்ற காரணத்தினால் அதை வடிவேலு தான் எடுத்திருக்கும் வேண்டும் என நினைத்து குமரேசனிடம் சென்று இதைப் பற்றி சொல்ல அவர் அன்னலட்சுமி வீட்டிற்கு நியாயம் கேட்க அழைத்துச் செல்கிறார்.

Sai Pallavi: பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் சாய்பல்லவியின் கார்கி …!

ஆனால் வடிவேலு தன்னுடைய அப்பாவின் மீது சத்தியம் வைத்து நான் பணத்தை எடுக்கவில்லை என கூறுகிறான். வடிவேலு அப்பாவின் மீது சத்தியம் வைத்ததால் அவன் பணத்தை எடுத்து இருக்க மாட்டான் என அன்னலட்சுமி கூறுகிறாள்.


இன்னொரு பக்கம் அமுதா செந்திலிடம் பைக் ஓட்ட கற்றுத் தருமாறு கேட்க செந்திலும் கற்றுக் கொடுக்கிறான். இந்த நேரத்தில் சிதம்பரம் தன்மீது திருட்டு பணியை சுமத்திய கோபத்தில் வடிவேலு செந்திலுக்கு போன் போட்டு அமுதாவுடன் கல்யாணத்தை நிறுத்துமாறு கூறுகிறான். இதனால் செந்தில் எடுக்க போகும் முடிவு என்ன?

பணத்தை திருடியது வடிவேலு இல்லை என்பது சிதம்பரத்துக்கு தெரிய வருமா என்பதை அறிந்து கொள்ள இன்றைய அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் எபிசோடை தவறாமல் பாருங்கள்.

அடுத்த செய்தி