ஆப்நகரம்

Zee tamil: கார்த்தி திருமணத்தில் ஐஸ்வர்யா செய்த சூழ்ச்சி.. அபசகுணம் என பதறும் அபிராமி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 29 Dec 2022, 6:16 pm

ஹைலைட்ஸ்:

  • ஜீ தமிழில்
  • கார்த்திகை தீபம் அப்டேட்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கார்த்திகை தீபம்
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கிராமத்தில் இருக்கும் தீபாவின் தோழியின் அம்மா மகளை பெண் பார்க்க வந்ததாக சொல்லி துணைக்கு தீபாவை அழைத்துச் செல்கிறாள். தோழியின் வீட்டில் மாப்பிள்ளை குடும்பம் காத்திருக்க தீபா தோழியை அலங்கரித்து அழைத்து கொண்டு வர அனைவருக்கும் பெண்ணை பிடித்து விடுகிறது. அவர்கள் நன்றி சொல்லிவிட்டு போகின்றனர்.
அதன்பிறகு தீபாவும் நான் வரேன் என்று சொல்லிவிட்டு போக தோழியின் அப்பா எதற்கு தீபாவை கூட்டிட்டு வந்தாய் என்று கேட்க நம்ம பொண்ணு சுமாரான கலர் தான் அந்த தீபா கருப்பு அவ பக்கத்துல இருந்தா கண்டிப்பா நம்ம பொண்ண பார்த்தவுடனே பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவாங்க, அதுக்காக தான் தீபாவை அழைத்து வந்தேன் என்று சொல்ல அதை வெளியில் இருந்து தீபா கேட்டு பீல் செய்கிறாள்.

Thunivu: எனக்கு போட்டியில்லை என்ற விஜய்..பதிலடி கொடுக்கும் அஜித்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பின்னர் ராஜ ஸ்ரீ வீட்டில் ரூபஸ்ரீ தீபாவின் திருமணம் பற்றி பேச உடனே ராஜஸ்ரீ மைதிலிக்கு போன் செய்து அந்த மாப்பிள்ளை வீட்டை பற்றி கேட்க இதை பின்னால் இருக்கும் தீபா கவனித்து விட மைதிலி சமாளித்து போனை வைக்கிறாள்.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் தீபா வீட்டில் அனைவரும் சாப்பிட்டபடி இருக்க மைதிலி மாப்பிள்ளை வீட்டை பற்றி விசாரிக்க வேண்டும், மாப்பிள்ளையும் ஜாதகத்தை வாங்கி நாளை தீபாவின் ஜாதகம் பொருத்திப் பார்க்கலாம். நானும் அத்தையும் நாளைக்கு சென்னை போகிறோம் என்று சொல்கிறாள்.

மறுநாள் காலை அபிராமி கார்த்தியின் ஜாதகத்தையும் நட்சத்திராவின் ஜாதகத்தையும் வைத்து பூஜை செய்ய அதை பார்த்து ஐஸ்வர்யா விளக்கை அணைத்து அபசகுனம் என்று சொல்ல அபிராமி அப்செட்டாக அருணாச்சலம் அதெல்லாம் ஒன்றும் இல்லை வா என்று அழைத்துச் செல்ல அபிராமியும் ஜாதகத்தை எடுத்து கிளம்பி செல்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி