ஆப்நகரம்

Maari: ஜாஸ்மினை கொத்திய பாம்பு.. கடைசியில் சங்கரபாண்டிக்கும் காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 25 Jan 2023, 6:21 pm

ஹைலைட்ஸ்:

  • ஜீ தமிழில்
  • மாரி சீரியல் அப்டேட்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாரி
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சூர்யா கையில் இருந்த தாலி தவறுதலாக பாம்பு புற்றுக்குள் விழுந்துவிட யாரும் எடுக்காத நிலையில் ஜாஸ்மின் தானே எடுப்பதாக சொல்ல அனைவரும் வேண்டாம் என்று சொல்ல அதையும் மீறி ஜாஸ்மின் பாம்பு புத்துக்குள் கையை விடுகிறாள்.
உள்ளே இருந்து தாலியை எடுக்கும் போது பாம்பு கொத்த அந்த வலியும் பொருட்படுத்தாமல் ஜாஸ்மின் தாலியை எடுக்கிறாள். வெளியே எடுத்ததும் அனைவரிடமும் காட்டி வாங்க மணமேடைக்கு போகலாம் என்று சொல்லி தாலியை சங்கர பாண்டியிடம் கொடுக்க தாரா பாராட்ட ஜாஸ்மின் பாம்பு கடித்த விஷயத்தை சொல்கிறாள்.


Keerthy suresh: பல ஆண்டுகளாக அவரை காதலித்து வரும் கீர்த்தி சுரேஷ் ? விரைவில் திருமணமா ?

தாரா உடனே டாக்டரிடம் போகலாம் என்று சொல்ல ஜாஸ்மின் வேண்டாம் சூர்யா என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என் உயிர் போனாலும் பரவாயில்லை அந்த மாதிரி நான் ஜெயிக்கணும் என்று சொல்லி மணமேடையில் அமர்கிறார்.


அய்யர் சடங்குகள் செய்ய தாரா அவசரப்படுத்த ஜாஸ்மின் பாம்பு கடி மயக்கத்தில் இருக்கிறாள்‌. அப்போது சங்கர பாண்டிக்கு ஜெகதீஷ் போன் பண்ணி சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டினான் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்ட அதை தாராவிடம் சொல்ல தாரா அதைப்பற்றி கவலைப்படாமல் சீக்கிரம் தாலி கட்ட ஏற்பாடு செய்கிறாள்.

அப்போது போலீஸ் வந்து சிலை காணாமல் போன விஷயத்தை பற்றி விசாரிக்க கல்யாணம் நிற்க பிறகு அவர்களை பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து மீண்டும் தாலி கட்ட ஏற்பாடு செய்ய பல்லி ஐயர் மேல் விழுகிறது.

தோஷம் வந்து விட்டது ஆதலால் நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி ஐயர் குளிக்க செல்ல ஜாஸ்மின் பாம்பு கடித்த மயக்கத்தில் இருக்க ஐயர் குளித்து வந்து தாலியை கொடுக்க ஜாஸ்மின் சந்தோசமாக சங்கரபாண்டியை போய் மணி அடிக்க சொல்கிறாள்.

அந்த மணியின் சத்தம் என் காதில் ஒலிக்க வேண்டும் போய் அடி என்று சொல்ல சங்கரபாண்டி மணி அடிக்க மணி அறுந்து தலையில் விழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி