ஆப்நகரம்

Maari: ராசாத்தியை கொல்ல ஜாஸ்மின் போட்ட திட்டம்.. மாரிக்கு தெரிய வரும் உண்மை - மாரி சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 7 Feb 2023, 12:26 pm
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராசாத்தி ஜாஸ்மின் வீட்டுக்கு வந்து அவள் ஏற்கனவே செய்த தவறுகளை ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்க ஜாஸ்மின் அதிர்ந்து போகிறாள். பிறகு ஜாஸ்மின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ராசாத்தி எச்சரித்து மன்னித்து விட்டு போக ஜாஸ்மின் கோபப்படுகிறாள்.
Samayam Tamil மாரி


மறுநாள் ஜாஸ்மின் ரிஜிஸ்டர் ஆபீசில் ராசாத்தி என் கணவனை பொய் சொல்லி வர வைத்து கர்ப்பம் என மிரட்டி தாலி கட்ட ஏற்பாடு செய்ய அங்கு ராசாத்தி ஒரு குடும்பத்திற்கு பணம் கொடுக்க வரும் போது தன் கணவனின் திருமணத்தை பார்த்து விடுவாளா? இல்லையா? என் பரபரப்பாக காட்சிகள் நகர்கிறது.

Rajini: ரஜினியை சுற்றிவளைத்த ரசிகர்கள்..ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு..!

அடுத்து ஜாஸ்மின் ராசாத்தியின் கணவனை திருமணம் செய்து பிறகு ராசாத்தியை வீட்டுக்கு அழைத்து வர சொல்லி அவளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக சொல்லி அவன் புருஷனை நம்ப வைக்கிறாள்.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்


ஜாஸ்மின் வீட்டில் மல்லி பூவில் விஷம் தடவி ராசாத்திக்காக காத்திருக்க கணவன் ராசாத்தியை பொய் சொல்லி வீட்டிற்கு அழைத்து வர ஜாஸ்மின் விஷம் கலந்த ரூமில் கொண்டு போய் ராசாத்தியை உட்கார வைக்க சொல்கிறாள்.

பிறகு கணவனுக்கும் ராசாத்தியை ஜாஸ்மின் கொல்ல போகும் விஷயம் தெரியாமல் ராசாத்தியை அந்த ரூமில் சென்று உட்கார வைக்க ஜாஸ்மின் கதவை மூட விஷம் கலந்த ரூமில் ராசாத்தி உட்கார்ந்து இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி