ஆப்நகரம்

Zee tamil: சங்கிலி செய்த சூழ்ச்சி.. சக்தி இடம் சண்டை போட வரும் புஷ்பா, நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க

Samayam Tamil 22 Sep 2022, 7:12 pm

ஹைலைட்ஸ்:

  • ஜீ தமிழில்
  • மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மீனாட்சி பொண்ணுங்க
ரங்கநாயகி கணக்கு பிள்ளையிடம் மீனாட்சி வீட்டைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வருமாறு அனுப்பி வைத்தாள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனாட்சி கணக்கு பிள்ளையிடம் பணம் வேண்டாம் என திருப்பி அனுப்புகிறாள். அங்கு வரும் சக்தி இது குறித்து விசாரிக்க உண்மையை மறைக்கிறாள். இதை பார்த்த வெற்றி குழப்பமடைகிறான்.
இரவு நேரம் சங்கிலி மது குடித்தபடி நீதிமணியிடம் அவர் பெரிய மகள் யமுனாவை பெண் கேட்க நீதிமணி டென்ஷன் ஆகிறான். கணக்கு பிள்ளை இரங்கநாயகியிடம் மீனாட்சி பணம் வாங்கவில்லை என சொல்ல வெற்றி நான் கொடுக்கட்டுமா என கேட்க இரங்கநாயகி வேண்டாம் என மறுக்கிறாள்.

முத்தக்காட்சியில் சிம்பு நடிக்கமாட்டேன் என்றார் : கௌதம் மேனன்

அடுத்து கல்லூரிக்கு கிளம்பிய துர்கா இன்று ஃபீஸ் கட்ட வேண்டும் என சொல்ல சக்தி உண்டியல் கொண்டு வந்து பணம் ரெடி பண்ண, சாந்தா தான் சேர்த்து வைத்த பணத்தை குடுத்து உதவி செய்கிறாள். அடுத்து கல்லூரியில் சண்முகத்துக்கு பணம் கட்ட வரும் புஷ்பாவிடம் சங்கிலி சக்தி ரோட்டில் வைத்து திட்டிய விசயத்தை போட்டுக் கொடுக்கிறான்.

அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்


இதனால் கோபம் அடைந்த புஷ்பா தீடீரென அங்கு சக்தியை பார்த்து கோபமாகி அவளிடம் சண்டை போட சொல்கிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? சக்தி எப்படி பதிலடி கொடுக்கப் போகிறாள் என்பதை அறிய தினம் தோறும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை தவறாமல் பாருங்கள்.

அடுத்த செய்தி