ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

''உத்தரப்பிரதேச தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடிக்கும்'' என்று சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

TOI Contributor 28 Jan 2017, 4:37 pm
''உத்தரப்பிரதேச தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடிக்கும்'' என்று சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
Samayam Tamil up election 2017 bjp will win with two third majority amit shah says
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை


லக்னோவில் நடந்த இந்திரா காந்தி பிரதிஷ்தான் என்ற நிகழச்சியில் பங்கேற்ற அமித ஷா தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேச தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்து நாங்கள் ஆட்சியை அமைப்போம். சிறந்த, ஊழல் இல்லாத ஆட்சிக்கு எங்களது தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் மூலம் 30 லட்சம் பேரிடம் கருத்துக்களை கேட்டறிந்தோம். இதுவரை நாங்கள் 5000த்துக்கும் அதிகமான கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 80 இடங்களில் 72 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த வெற்றியை அளித்த மாநில மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த அளவிற்கு நீங்கள் கொடுத்த வேற்றியால்தான் மத்தியில் எங்களால் மெஜாரிட்டி அரசு அமைக்க முடிந்தது. இல்லையென்றால் எங்களால் அமைத்து இருக்க முடியாது. மத்தியில் நாங்கள் ஆட்சியில் இருந்தும் மாநிலத்திற்கு எங்களால் அதிகளவில் செய்ய முடியாமல் போனது'' என்றார்.

மாநிலத்தில் உள்ள மொத்தம் 403 தொகுதிகளில் இதுவரை 371 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், 80 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 130 பேர் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏற்கனவே ஆளும் சமாஜ்வாடிக் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பெண்கள் கல்வி நிதி உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

Bharatiya Janata Party (BJP) president Amit Shah today released the party's manifesto for the upcoming Uttar Pradesh assembly elections focusing on the schemes for all round development of the state at a function in Indira Gandhi Pratishthan in Lucknow.

அடுத்த செய்தி