லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தேர்தலையொட்டி அங்கு நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் இதுவரை ரூ.110 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 18.68 லட்சம் லிட்டர் மது உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் வருகிற மே மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு அம்மாநிலத்தில் நாளை மறுநாள் (பிப்.23-ம் தேதி) நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வருகிற 27-ம் தேதி மாற்றும் மார்ச் 4, 8-ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தலையொட்டி அங்கு நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் இதுவரை ரூ.110 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 18.68 லட்சம் லிட்டர் மது உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என துணை தேர்தல் ஆணையர் விஜய் தேவ் தெரிவித்துள்ளார். அதேபோல், 208 பறக்கும் படையினர், 237 கண்காணிப்பு படையினர் தொடர்ந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#UPpolls: Over Rs 110 crore cash, 18.68 lakh litres of liquor seized
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் வருகிற மே மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு அம்மாநிலத்தில் நாளை மறுநாள் (பிப்.23-ம் தேதி) நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வருகிற 27-ம் தேதி மாற்றும் மார்ச் 4, 8-ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தலையொட்டி அங்கு நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் இதுவரை ரூ.110 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 18.68 லட்சம் லிட்டர் மது உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என துணை தேர்தல் ஆணையர் விஜய் தேவ் தெரிவித்துள்ளார். அதேபோல், 208 பறக்கும் படையினர், 237 கண்காணிப்பு படையினர் தொடர்ந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#UPpolls: Over Rs 110 crore cash, 18.68 lakh litres of liquor seized