ஆப்நகரம்

கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யனும்? வைரலாகும் வடிவேலு மீம்ஸ்....

கொரோனா பாதிப்பு குறித்து சமூகுவலைத்தளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.

Samayam Tamil 23 Mar 2020, 8:18 am
கொரோனா குறித்த பீதி இன்று உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பேஸ்புக்கில் Krishna Kittu என்பவர் தனது பக்கத்தில் ஒரு வடிவேலு மீம்ஸ்களை பகிர்ந்துள்ளார். அதை கீழே காணுங்கள்.
Samayam Tamil corona virus vadivelu memes on janata curfew gone viral on social media
கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யனும்? வைரலாகும் வடிவேலு மீம்ஸ்....


அதிகமாக பொருட்களை சேமிக்காதீர்..

கொரானாவால் பீதி ஏற்பட்டு தேவைக்கும் அதிகமாக பொருட்களை சேர்க்காதீர்கள். மற்றவர்களுக்கும் இது தேவைப்படும்.

சமூக பாகுபாடு வேண்டாம்

சமூகத்திடமிருந்து உங்களை தனிமைப்படுத்தி சமூகத்தை தூரத்தில் வைத்து பாருங்கள். சமூக பாகுபாடு பார்க்காதீர்கள்.

கூட்டம் வேண்டாம்

பொதுமக்கள் அதிகமாக எங்கும் கூட வேண்டாம். தேவையில்லாமல் ஒருவரை ஒருவர் சந்தித்துபேசிக்கொள்வதை கூட தவிர்க்கவும். தேவையற்ற விஷயங்களை பேச செல்போன் இருக்கிறது. நேரில் வேண்டாமே

தனிமை படுத்திக்கொள்ளுங்கள்

முடிந்த அளவு உங்களை நீங்களே சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளங்கள். அப்பொழது தான் கொரோனா பரவுதல் தடைபடும்.

முகத்தை கழுவுங்கள்

சுத்தமாக கைகளை கழுவுகள் பெரும்பாலும் கொரோனா கைகளின் மூலம் தான் உங்கள் கண் மூக்கு வழியாக உடலுக்குள் செல்கிறது.

வீட்டிலேயே இருங்கள்

முடிந்த அளவு வீட்டிலேயே இருந்து நேரத்தை உங்கள் குடும்பத்துடனும், உங்கள் குழந்தைகளுடனும் செலவு செய்யுங்கள் கடந்த காலங்களில் நடந்த நல்ல விஷயங்களை நினைத்து பார்த்து அதை மற்றவர்களுடன் பகிருங்கள்.

சுகாதாரம் முக்கியம்

இந்த நேரத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டியது முக்கியம் அதனால் எப்பொழுதும் நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

தனியா தைரியமா இருங்க...

இந்த நேரத்தில தனியா இருக்குறத விட முக்கியம் தைரியமா இருக்குறது. உங்கள் மன தைரியம் தான் உங்களை எல்லா விஷயங்களிலிருந்தும் காப்பாத்தும்.

வதந்திகளை பரப்பாதீர்கள்

கொரோனா குறித்து உங்களுக்கு வரும் செய்திகள் மற்றும் தகவல்களின் உண்மை தன்மையை தெரிந்து பின்னர் மற்றவர்களுக்கு சேர் செய்யவும், உண்மை தன்மையை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம். உண்மை தகவல் பரவுவதை காட்டிலும் பொய்யான தகவல்கள் பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

டாக்டரை அணுகுங்கள்

உங்களுக்கு லேசான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

அடுத்த செய்தி