ஒலிம்பிக் 2020
விளையாட்டு வீரர்களின் உட்சபட்ச கனவாக இருக்க வேண்டியது ஒலிம்பிக் போட்டிதான். தடகளபோட்டிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும். அப்படியாக கடந்த 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க வேண்டியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டி நடக்கவில்லை. அந்த போட்டிகள் இந்தாண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 23ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 போட்டி துவங்குகிறது.
டோக்கியா
Image Source: Elavenil Valarivan
இந்த போட்டியில் உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியாவிலிருந்தும் ஏராளமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க ஜப்பானிற்கு சென்றுள்ளனர். அதில் முக்கியமான தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் என்ற பெண் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். அதில் 24ம் தேதி அவருக்கு முதல் தகுதி சுற்று போட்டி நடக்கிறது. இந்த பகுதியில் இளவேனில் வாலறின் பற்றி காணலாம் வாருங்கள்
பிறப்பு
Image Source: Elavenil Valarivan
1999ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி கடலூர் மாவட்டத்தில் பிறந்த பெண் குழந்தை தான் இளவேனில் வாலறிவன், இவருக்கு 2 வயதாக இருக்கும் போதே பெற்றோர்கள் குஜராத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இளவேனில் அங்கு தான் பள்ளி படிப்பை படித்தார்.
இளவேனில் வாலறிவன்
Image Source: Elavenil Valarivan
இளவேனில் தனது 13 வது வயதில் ஜாலியாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். அன்று துப்பாக்கியை கையில் தூக்கியவர் இன்று இந்தியாவிற்காக ஜப்பானில் துப்பாக்கி தூக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.
முதல் பரிசு
Image Source: Elavenil Valarivan
13வது வயதில் இவர் பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் 15வது வயதில் தீவிரமாக பயற்சி செய்தார். இந்த பயிற்சிக்காக இவர் வசிக்கும் இடத்திலிருந்து தினமும் 60 கி.மீ பயணிக்க வேண்டியது இருந்தது. இதனால் இவரது படிப்பு பாதித்தது. மனம் தளராமல் இரண்டையும் சீராக கொண்டுசென்றார். ஒரு கட்டத்தில் இவர் ஜூனியர் பிரிவில் குஜராத் மாநிலம் சார்பில் துப்பாக்கி சுடுதலில் கலந்து கொண்டார்.
ககன் நராங்
Image Source: Elavenil Valarivan
2017ம் ஆண்டு இந்தியாவில் துப்பாக்கி சுடும் சாம்பியன் ககன் நராங், நாட்டில் துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் வீராங்கனையை கண்டுபிடித்து அவர்களுக்கு புராஜெக்ட் லீப் என்ற பெயரில் ஒரு பயிற்சியளிக்கும் திட்டத்தை உருவாக்கினார் இந்த திட்டத்தில் சேர இளவேனில் தேர்வு செய்யப்பட்டார். பின்ன ககன் நராங்கிடம் பயிற்சி பெற்றார்.
ஏர் ரைஃபில் பிரிவு
Image Source: Elavenil Valarivan
இதன் பலனாய் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில்தங்க பதக்கம் வென்றார். இது இவரின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. தனது 19வது வயதில் அவர் அதை செய்துள்ளார்.
சர்வதேச பதக்கங்கள்
Image Source: Elavenil Valarivan
அதன் பின் 2019ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்க பதக்கம் வெற்றார். இதனால் இவர் இரண்டு முறை உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். இந்தாண்டு ஜெர்மனி முனிச்சில் நடந்த போட்டியில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்தை தவற விட்டார்.
சினியர் பிரிவில் தங்க பதக்கம்
Image Source: Elavenil Valarivan
அதன் பின் ரியோ டி ஜெனிரியோவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலககோப்பை போட்டியில் இளவேனில் சிறப்பாக விளையாடி தங்க பதக்கத்தை வென்றார். இது தான் அவர் சினியர் பிரிவில் முதல்முறையாக பெற்ற தங்கபதக்கமாகும். இந்த போட்டிகளுக்கு பின்பு இவர் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் போட்டி
Image Source: Elavenil Valarivan
இவருக்கான போட்டி 24ம்தேதி நடக்கிறது. ஒரே நாளிலேயே தகுதி மற்றும் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டுவ வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுவிடும். பெண்களுக்கான தகுதி போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 56 பேர் பங்கேற்கிறார்கள். அதில் 2 பேர் இந்தியர்கள் ஒருவர் இளைவேனில் வாலறிவன், மற்றொருவர் சந்தெல்லா அபுர்வி, இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு நடக்கிறது.
மற்றொரு இந்திய வீராங்கனை
Image Source: Elavenil Valarivan
இறுதி போட்டி 7.15 மணிக்கு நடக்கிறது. இந்த தகுதி சுற்றில் தேர்வானவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்பார்கள். இந்த பிரிவில் உலக சாதனை படைத்துள்ளது. இந்திய வீராங்கனை சந்தெல்லா அபுர்வி தான். இவர் 252.9 புள்ளிகள் பெற்றுள்ளார். இன்று வரை இது தான் உலக சாதனையாக இருக்கிறது. 2019ம் ஆண்டு பிப் மாதம் புதுடில்லியில் நடந்த போட்டியில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தங்கம் இந்தியாவிற்கு தான்
Image Source: Elavenil Valarivan
இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் உலககோப்பை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வாங்கியதால்,இளவேனில் மீதும், உலகசாதனை படைத்துள்ளதால் சந்தெல்லா மீதும் இந்திய மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பிரிவில் இவர்கள் இருவரில் யாரெனும் ஒருவர் ஒலிம்பிக் போட்டியிலும் தங்க பதக்கம் வாங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவர் தங்கம் வென்றால் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு தங்கம் கிடைக்கும் பெருமை நமக்கு கிடைக்கும் பொருத்திருந்து பார்ப்போம்.