ஆப்நகரம்

விண்கல் மூலம், ஒரே இரவில் கோடீஸ்வரரான சவப்பெட்டி தொழிலாளி!

ஜோஸுவா, 3 குழந்தைகளின் தந்தையான சவப்பெட்டி ஊழியர். இரவில் விண்கல் ஒன்று கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்ததால் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.

Samayam Tamil 19 Nov 2020, 5:59 pm
வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது, ஒரே இரவில் கோடீஸ்வரரான பலரை நாம் கண்டிருக்கிறோம். அவர்கள் பெரும்பாலும் லாட்டரி டிக்கெட், அல்லது தங்கம், வைர புதையல் கிடைத்த காரணத்தால் ஒரே இரவில் பணக்காரர் ஆகியிருப்பார்கள். அல்லது அவர்கள் கண்டுபிடித்த பொருள் அல்லது டெக்னலாஜி பெரும் விலைக்கு போயிருக்க வேண்டும்.
Samayam Tamil coffin maker becomes millionaire over night in indonesia
விண்கல் மூலம், ஒரே இரவில் கோடீஸ்வரரான சவப்பெட்டி தொழிலாளி!


ஆனால், ஆச்சரியப்படும் வகையில், இங்கே ஒருவர் வானில் இருந்து விழுந்த ஒரு விண்கல் காரணத்தால் ஒரே இரவில் 1.8 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார். 33 வயதான ஜோஸுவா என்பவர் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் வசித்து வருகிறார். இவரது வீட்டு கூரையை பிய்த்து கொண்டு ஒரு கல் விழுந்தது. அது சாதாரண கல் அல்ல, Meteorite எனப்படும் விண்கல்.

அந்த விண்கல் 2.1 கிலோ எடையும், 4.5 பில்லயன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அந்த விண்கல் CM1/2 carbonaceous Chondrite என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இது மிகவும் அரிதானது என்றும் கூறப்படுகிறது. சின்ஹா வகை விண்கல் ஒரு கிராம் விலையே 853 அமெரிக்கா டாலர்களாம்.

ஜோஸுவா சவப்பெட்டி உருவாக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள். முதல் முறை அந்த கல்லை தொட்டது தூக்கும் அது அது வெப்பமாக இருந்தது. என் வீட்டு கூரை வழியே பிய்த்துக் கொண்டு அது விழுந்திருந்தது.

அது விழுந்த போது, வீடே நடுங்கும் படியான உணர்வு கொண்டோம், அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது. எழுந்து, தேடி பார்த்த போது தான், கூரை இடிந்து, எங்கள் வீட்டுக்குள் விண்கல் விழுந்தது தெரியவந்தது என ஜோஸுவா ஊடகங்களிடம் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.

கண்டிப்பாக எங்கள் வீட்டில் விழுந்த கல், ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும் என்று கருதினேன், என மேலும் ஜோஸுவா குறிப்பிட்டிருந்தார். இந்த கல்லை அமெரிக்க விண்கல் ஆராய்ச்சியாளர் ஜாரட் காலின்ஸ் என்பவர் வாங்கி இருக்கிறார்.

அடுத்த செய்தி