ஆப்நகரம்

ஒரே குடும்பத்தில் 31 டாக்டர்கள்....

ராஜஸ்தானில் உள்ள ஒரே குடும்பத்தில் 31 டாக்டர்கள் இருந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 25 Mar 2020, 11:31 pm
கொரோனாவிற்காக தற்போது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது மக்கள் எல்லாம் வீட்டிற்குள்ளே பதுங்கியுள்ளனர். கொரோனா சமூக பரவலை தடுக்க இதை விட வேறு வழியில்லை என மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. மற்ற உலகநாடுகளும் இதே மாதிரியான நடை முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர்.
Samayam Tamil rajasthan jaipur family has 31 doctors is makes everyone amaze
ஒரே குடும்பத்தில் 31 டாக்டர்கள்....


31 டாக்டர்கள்

இந்நிலையில் நாடு முழுவதும் டாக்டர்களுக்கான தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது, எந்த துறை டாக்டராக இருந்தாலும் அவருக்கு வேலை இருக்கிறது. அதனால் நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களும் மருத்துவமனைகளுக்கு போய் வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வீட்டில் 31 பேர் டாக்டர்கள் இருக்கிறார்கள் என சொன்னால் நம்ப முடிகிறதா?

தாத்தா பாட்டி முதல் பேரன் பேத்தி

என்னப்பா ஒரு வீட்டில் 31 பேர் இருந்தாலே அது அதிசயம், நீ 31 டாக்டர் என்று சொல்கிறாயே என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அப்படியான ஒரு குடும்பம் இன்றும் வாழ்கிறது., இந்த குடும்பத்தில் உள்ள தாத்தா பாட்டி முதல் பேரன் பேத்திவரை எல்லோரும் ஏதோ ஒரு துறையில் மருத்துவ டாக்டர்கள் தான்.

ஜெப்பூர் பதானி குடும்பம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பதானி குடும்பத்தான் இந்த டாக்டர் குடும்பம். இவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். இவர்கள் வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஏதோ ஒரு துறையில் டாக்டர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் படிக்கும் குழுந்தைகளும் தங்கள படிப்பை தேர்வு செய்யும் காலம் வரும போது டாக்டர் படிப்பை தான் தேர்வு செய்கின்றனர்.

மருத்துவமனை

இந்த குடும்பத்தினர் தங்கள் குடும்பத்திற்கு என ஒரு பெரிய மருத்துவமனையே கட்டியுள்ளனர். ஷவாய் மன் சின் என்ற அந்த மருத்துவமனையை கட்டி அதில் இந்த குடும்பத்தில் உள்ள 20 பேர் மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர். மற்றவர்கள் அரசு மருத்துவர்களாகவும் சிலர் மருத்துவ மேல்படிப்பிலும் உள்ளனர்.

விளையாட்டு

ஏற்கனவே 31 மருத்துவர்கள் உள்ள இந்த கடந்த 2014ம் ஆண்டு ஒரு பெண் டாக்டர்கள் படிப்பில் சேர்ந்தற்காக நுழைவு தேர்வு எழுதி தேசிய அளவில் 107வது இடத்தை பிடித்து டாக்டர் படிப்பில் சேர்ந்துள்ளது. இதே குடும்பத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் டாக்டர் படித்து வருவதும் மட்டுமல்லாமல் கூடபந்தாட்ட போட்டியில் சாம்பியனாகவும் இருந்து வருகிறார்.

வக்கீல்

இந்த குடும்பத்தில் மூதாதையராக இருந்தவர் ஒரு வக்கீலாக இருந்தார். அவருக்கு மொத்தம் 8 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் எல்லாம் வளர்ந்து டாக்டர்களாக நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என அவர் எண்ணினார். அதனால் அதில் 7 பேர் டாக்டருக்கு படித்தனர். அதன் பின் அவர்களுக்கு ஒரு டாக்டருடன் திருமணமாகி அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் டாக்டருக்கு படித்து வருகின்றனர். இவர்கள் எல்லாம் இன்றும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

இன்று உலகம் முழுவதும் டாக்டர்கள் தான் கடவுள்களாக பார்க்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் ஒரே குடும்பத்தில் 31 பேர் டாக்டர்களாக இருந்தது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. பலர் இந்த குடும்பத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த குடும்பம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி