ஆப்நகரம்

தர்பூசணிக்காக ஒரு போர் வந்த கதை உங்களுக்கு தெரியுமா? இங்கே படியுங்கள் ஆச்சரியமாக இருக்கும்

இந்த உலகில் தர்பூசணிக்காக போர் நடந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்

Samayam Tamil 12 Feb 2022, 9:55 am
இந்த உலகம் பல போர்களை பார்த்திருக்கிறது. இரு வேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர், இருவேறு கொள்கைகளுக்கு இடையே நடக்கும் உள்நாட்டு போர், தலைமையிடத்தை கைபற்ற போர், தனக்கான இடத்தை பிரித்து கொடுக்க போர், சுதந்திரம் கேட்டு போர் என பல விதமான போர்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது.
Samayam Tamil the story of the war between two kings for watermelon
தர்பூசணிக்காக ஒரு போர் வந்த கதை உங்களுக்கு தெரியுமா? இங்கே படியுங்கள் ஆச்சரியமாக இருக்கும்


​தர்பூசணிக்காக போர்

ஆனால் ஒரு தர்பூசணி பழத்திற்காக போர் நடந்த கதை உங்களுக்கு தெரியுமா 1644ம் ஆண்டில் ஒரு தர்பூசணி பழத்திற்காக மிகப்பெரிய போரே நடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டனர். இந்த போரை பற்றி தான் இங்கு காணப்போகிறோம்.

​ராஜஸ்தானில் போர்

376 ஆண்டுகளுக்கு முன்பு "தர்பூசணிக்கான சண்டை" என வரலாற்றில் இடம்பெறும் அளவிற்கு ஒரு போர் நடந்துள்ளது. 1644ம் ஆண்டு தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த போர் நடந்துள்ளது. இரண்டு அரசர்கள் மத்தியில் இந்த போர் நடந்துள்ளது.

​பிக்கெனர் - நாககூர்

அதாவது பிக்கெனர் என்ற ஊரின் எல்லை பகுதியில் சில்வா என்ற கிராம் உள்ளது. இந்த ஊர் பிக்கெனர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜாக்கினன் என்ற கிராம் நாககூரை தலைமையாக கொண்டு செயல்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் சில்வாவும், ஜாக்கினனும் அடுத்தடுத்த ஊர்கள்

​எல்லையில் விளைந்த தர்பூசணி

இந்த இரண்டு ஊருக்கும் எல்லையில் உள்ள பகுதியில் ஒரு தர்பூசணி செடி இருந்துள்ளது. இந்த தர்பூசணி செடி நாககூர் அரச எல்லை பகுதியிலும் அதில் விளைந்த தர்பூசணி பிக்கெனர் அரச எல்லையிலும் இருந்துள்ளது. தற்போது இந்த தர்பூசணி யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் ஆரம்பித்தது இந்த போர்

​யாருக்கு சொந்தம்

நாககூர் அரசு செடி அவர்கள் எல்லையில் இருப்பதால் தர்பூசணி பழம் அவர்களுக்கு தான் சொந்தம் என சொல்கிறது. பிக்கெனர் அரசு பழம் அவர்கள் எல்லைக்குள் இருப்பதால் அவர்களுக்கு தான் சொந்தம் என சொல்கிறது. இந்த பழத்திற்காக இரண்டு அரசுகளுக்கும் இடையே பெரிய போரே வந்துவிட்டது.

​சண்டை

நாககூர் போர்படையை சங்க்வீ சுக்மால் என்பவர் தளபதியாக இருந்து வழி நடத்தினார். ராமசந்திர முக்கியா என்பவர் பிக்கெனர் நாட்டு போர்படையை தளபதியாக இருந்து வழி நடத்தினார். இதில் ராஜா கரண் சிங் என்பவர் பிக்கெனர் பகுதியின் அரசராகவும், ராவ் அமர் சிங் என்பவர் நாககூரின் முகலாய பேரரசின் சிற்றரசராகவும் இருந்தார். இவர்களுக்கு இடையே தான் சண்டை நடந்தது.

​முகலாய பேரரசு

இந்த போர் குறித்த செய்தி முகலாய பேரரசின் காதுகளுக்கு சென்றது. ஆனால் அவர்கள் காதுகளுக்கு செல்லும் முன்பே போர் துவங்கிவிட்டது. போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரை இழந்தனர். இந்த போரில்பிக்கெனர் அரசு வெற்றிபெற்று தர்பூசணி பழத்தை எடுத்துக்கொண்டது. ஒரு தர்பூசணிக்கு போரா? பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது.

அடுத்த செய்தி