ஆப்நகரம்

வேலைக்கு போகாமல் லீவு எடுப்பதற்காக 7 ஆண்டுகளில் 7 முறை கர்ப்பமான பெண்...!

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு வேலைக்கு செல்லாமலேயே சம்பளம் வாங்க எண்ணி கடந்த 7 ஆண்டுகளில் 7 முறை கர்ப்பமாகியுள்ளார். இது குறித்த விரிவான செய்திகளை கீழே காணுங்கள்.

Samayam Tamil 12 Dec 2019, 12:41 pm
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு வேலைக்கு செல்லாமலேயே சம்பளம் வாங்க எண்ணி கடந்த 7 ஆண்டுகளில் 7 முறை கர்ப்பமாகியுள்ளார். இது குறித்த விரிவான செய்திகளை கீழே காணுங்கள்.
Samayam Tamil woman claims to be pregnant for 7 long years and the reason will leave you shocked
வேலைக்கு போகாமல் லீவு எடுப்பதற்காக 7 ஆண்டுகளில் 7 முறை கர்ப்பமான பெண்...!


லீவு

நாம் வேலை பார்க்கும் இடங்களில் திடீரென லீவு தேவைப்பட்டால் உடல் நிலை சரியில்லை என்ற ஒரு பொய்யான காரணத்தைக் கூறி லிவு எடுப்போம். சில நேரம் உண்மையான காரணத்தைக் கூற முடியவில்லை என்றால் இப்படியான லீவை எடுப்போம்.

மகப்பேறு விடுமுறை

இந்தியாவில் இந்த லீவு போக மற்ற பல லீவுகள் ஊழியர்களுக்குக் கிடைக்கிறது. முக்கியமாகப் பெண்களுக்கு மகப்பேறுக்காக சம்பளத்துடன் கூடி விடுமுறைகள் கிடைக்கிறது. ஆனால் இதைத் தவறான முறையில் பயன்படுத்திய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பற்றித் தான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

7 ஆண்டுகள் சம்பளம்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் ஒரு பெண் கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து வீட்டிலிருந்து கொண்டே சம்பளம் வாங்கி வந்துள்ளார். இது எப்படி சாத்தியம் என விசாரிக்கும் போது தான் சம்பளத்துடன் லீவு எடுப்பதற்காக அவர் செய்தலை வெளியே வந்தது.

7 முறை கர்ப்பம்

இந்தியாவில் அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு பேற்கால காலத்தில் அரசு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்திய அந்த பெண் கடந்த 7 ஆண்டுகளில் 7 முறை கர்ப்பமாகியுள்ளார்.

சிக்கினார்

பல ஆண்டுகளாக இப்படி ஒரு ஊழியர் இந்த பள்ளியில் வேலை பார்க்கிறார் என்பதே தெரியாமல் போன நிலையில் ஒரு கட்டத்தில் இதைக் கண்டு பிடித்த பள்ளி நிர்வாகம் அவரை விசாரணைக்காக அழைத்தது. அப்பொழுது அவர் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்குவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் வேண்டுமென்றே கர்ப்பமாகியுள்ளார்.

வைரல்

அரசின் சலுகையைப் பயன்படுத்தி ஒரு பெண் வேலையே செய்யாமல் 7 ஆண்டுகள் தொடர்ந்து சம்பளம் வாங்கியதை அறிந்ததும் பள்ளி நிர்வாகம் அவருக்கு எச்சிரிக்கை விடுத்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி