ஆப்நகரம்

Kerala: பிட் அடித்த மாணவனை பிடித்த ஆசிரியருக்கு அடி உதை..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

கேரளாவில் பள்ளி தேர்வின் போது பிட் அடித்த மாணவனை பிடித்த ஆசிரியரை அந்த மாணவர் சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் அந்த ஆசிரியர் பலத்த காயமடைந்தார். தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2019, 5:05 pm
கேரள மாநிலம் செம்மநாடு ஜமாத் மேல்லநிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடந்துள்ளது. மாதிரி தேர்வின் போது தேர்வு நடக்கும் ஒரு அறைக்கு கண்காணிப்பாளராக அந்த பள்ளி இயற்பியல் ஆசிரியர் பாபி வி ஜோஸ் என்பவர் சென்றார். அவர் கேள்வி தாள்களையும், விடை தாள்களையும் வழங்கி தேர்வு துவங்கிய பின்பு கண்காணித்துகொண்டிருந்த போது ஒரு மாணவன் பிட் அடித்துகொண்டிருப்பதுதெரியவந்தது.
Samayam Tamil பிட் அடித்த மாணவனை பிடித்த ஆசிரியருக்கு அடி உதை..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!


இதை அந்த ஆசிரியர் பிடித்து அந்த மாணவனிடம் கேட்டார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர். ஆசிரியர் கன்னத்தில் பளார் என ஒரு அடி விட்டுள்ளார் அது அது முட்டும் அல்லாமல் ஆசிரியரை எட்டி உதைத்து அவரை கீழே தள்ளி மிதித்துள்ளார்.
Read More: ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள்..! பெண்கள் மீது விருப்பம் இல்லை என கூறுவதால் அதிர்ச்சி..!
மேலும் அருகில் இருந்த ஒரு மர பெஞ்சின் காலை உடைத்து அதைக்கொண்டு அந்த ஆசிரியரை சராமாரியா தாக்கியுள்ளார். மேலும் காலால் பல முறை மதித்துள்ளார். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அறையில் உள்ள ஆசிரியர்கள் வந்து அடிபட்ட ஆசிரியரை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அடிபட்ட ஆசிரியருக்கு உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு மற்றும் காதில் உள்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Read More: உலகின் முதல் மோடி தீம் கபே..! அதுவும் நம்ம தமிழ்நாட்டில்...!

அடுத்த செய்தி