ஆப்நகரம்

கிளாஸ் லீடர் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்

தெலுங்கானா மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தான் கிளாஸ் லீடர் ஆகாததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

Samayam Tamil 22 Jul 2019, 5:29 pm
தெலுங்கானா ராமண்ணாபேட்டையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளியில் நடந்த கிளாஸ் லீடருக்கான தேர்வில் போட்டியிட்டுள்ளான். ஆனால் அவனால் கிளாஸ் லீடராக தேர்வாக முடியவில்லை.
Samayam Tamil கிளாஸ் லீடர் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்


இதனால் அவர் மனமுடைந்து போனான். இந்நிலையில் பள்ளி முடிந்து அவன் வீட்டிற்கு திரும்பவில்லை. அவனை காணாவில்லை என பெற்றோர்கள் பல இடங்களில் அவனை தேடினர்.

இரண்டு நாட்கள் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசிலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே ஒரு சிறுவனின் பிணம் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது காணாமல் போன அந்த சிறுவனின் பிணம் தான் அது என கண்டு பிடித்தனர். பின்னர் இவனது சாவிற்கான காரணத்தை பள்ளியில் போலீசார் விசாரித்த போது தான். கிளாஸ் லீடர் ஆக முடியாததால் சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தெரியவந்தது.

சாதாரண கிளாஸ் லீடர் பதவிக்காக 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி