ஆப்நகரம்

தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மாணவன் பரிதாப பலி

மத்திய பிரதேச மாநிலம் நீமூச் டவுண் என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபர்கான் குரேஷி இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக முதலில் ஆரம்பித்துள்ளார்.

Samayam Tamil 1 Jun 2019, 2:44 pm
மத்திய பிரதேச மாநிலம் நீமூச் டவுண் என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபர்கான் குரேஷி இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக முதலில் ஆரம்பித்துள்ளார்.
Samayam Tamil தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மாணவன் பரிதாப பலி


போக போக அவர் அந்த விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 28ம் தேதி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பப்ஜி விளையாட துவங்கியுள்ளார். தொடர்ந்து 6 மணி நேரம் அந்த விளையாட்டிலேயே முழ்கினார். ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் தன்னுடன் விளையாடும் மற்றவர்களை செய்யும் தவறுகளுக்கு அதிகமாக கோபப்பட்டுள்ள கத்தியுள்ளார்.

அந்த போட்டியில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அவர் அழுது புலம்பி மயங்கியுள்ளார். இதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் குரேஷி இறந்துவிட்டதாக கூறினர்.

இவரது இறப்பிற்கான காரணத்தை பார்க்கும் போது விளையாட்டில்தான் தோல்வியடைந்த அதிர்ச்சியால் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இறந்துள்ளார்.
தொடர்ந்து பப்ஜி விளையாடி பள்ளி மாணவன் பலியான சம்பவம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி