ஆப்நகரம்

இரண்டே பேர் தான் முன்பதிவு செய்ததால் ரத்து செய்யப்பட்ட ரயில்

ரயிலில் செல்ல இரண்டு பேர் மட்டுமே முன் பதிவு செய்தததால் அந்த ரயில் சேவையே ரத்து செய்யப்பட்டது.

Samayam Tamil 11 Oct 2019, 10:18 am
வட மாநில பெண்கள் தங்கள் கணவன்மார்கள் நலமுடன் இருக்க வேண்டி ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து பூஜை செய்யும் நாளை "கர்வா சத்" எனக் குறிப்பிடுகின்றனர். வரும் 17ம் தேதி இது கடைப்பிடிக்கப்பட விருக்கும் நிலையில் கணவன் மனைவியிடையே நெருக்கத்தை ஏற்படுத்த இந்திய ரயில்வே துறை "கர்வா சத்" என்ற பெயரில் ஒரு புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்தியது.
Samayam Tamil கர்வா சத் ரயில் karva chauth Train


இந்த ரயிலில் கணவன் மனைவி இணைந்து "ட்ரீம் ஹாலிடே"வாக 5 நாட்கள் சுற்றுப் பயணம் செல்லலாம். வரும் 14ம் தேதி டில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் கோட்டை, பத்வோன் கி ஹாவெளி, கதிசார் ஏரி, ஜஸ்வந்த் தாடா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று 18ம் தேதி மீண்டும் டில்லியை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

Also Read : மகனுக்கு "தல அஜித்" மகளுக்கு "அஜித்தா" என பெயர் வைத்த நடிகர் அஜித் ரசிகர்...!

இந்த ரயிலில் திருமணமான தம்பதியினர் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என்றும், அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்திற்கு ஏசி முதல் வகுப்பிற்காக ரூ 1,02,960 மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பிற்காக ரூ 90,090 கட்டணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரயிலில் இலவச பாத மசாஜ், மற்றும் ரூ10 லட்சத்திற்கு இலவச காப்பீடு உள்ளிட்ட வசதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : ஜப்பானில் ஆட்டோவுடன் ஆயுதபூஜை கொண்டாடிய ரஜினி ரசிகர் வைரலாகும் வீடியோ

ஆனால் இந்த ரயிலில் செல்ல வெறும் 2 தம்பதிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் இந்த சேவையே ரத்து செய்யப்பட்டது. 78 பேர் பயணம்செய்யும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த பயணத்திற்கு வெறும் 4 பேர் மட்டும் முன் பதிவு செய்ததால் இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். அதிகமான கட்டணம் தான் மக்கள் முன்பதிவு செய்யாததற்குக் காரணமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி