இந்தியாவில் உள்ள ரயில்கள் எல்லாம் ஐஆர்சிடிசி என்ற நிறுவனம் மூலம ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது. இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தியாவில் ஓடும் எந்த ரயிலுக்கும் ஆன்லைன் புக்கிங்கை இந்த இணையதளம் மூலம் செய்ய முடியும். இந்த இணையதளம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இணையதளமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி ட்விட்டரில் ஆனந்த் குமார் என்ற நபர் ஐஆர்சிடிசி இணையதளங்களில் வரும் விளம்பரங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் அடிக்கடி வருவதாகவும், தனக்கு அனு எரிச்சலூட்டுவதாகவும் அதை சரி செய்யும்படியும் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டில் ஐஆர்சிடிசி ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோரையும் அந்த ட்வீட்டில் டேக் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த இந்திய ரயில்வே சேவா, ஐஆர்சிடிசி கூகுள் நிறுவனத்திடம் தான் விளம்பர பகுதியை கொடுத்துள்ளது. அது அந்த ஆப்பை பயன்படுத்துவர்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய இணையதளம், அவர்கள் பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு விளம்பரங்களை வழங்குகிறது. அதனால் தாங்கள் உங்கள் பிரவுசரின் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரியை அழித்து விட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள் என பதிலளித்திருந்தது.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த நபர் எதை அடிக்கடி பார்க்கிறாரோ அது தான் அவருக்கு விளம்பரமாக வருகிறது என இந்தியன் ரயில்வேஸ் சேவா கூறியது. நெட்டிசன்களை சிரிக்க வைத்து விட்டது. பலர் இந்த ட்வீட்டில் ஆனந்த் குமாரை கிண்டல் செய்ய துவங்கிவிட்டனர்.
இதையடுத்து ஆனந்த்குமார் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும் இந்தியன் ரயில்வேஸ் சேவா ட்வீட்கள் இன்னும் இருக்கின்றன. அதில் பலர் ஆனந்த் குமாரைடேக் செய்து கிண்டலடித்து வருகிறனர். அவரது ஐடியையும் பிரைவேட்டில் வைத்துள்ளார். இதனால் அவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த கடந்த 2019ம் ஆண்டு அப்பொழுதே இந்த ட்வீட் எல்லாம் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போதும் இந்த ட்விட்டரின் ஸ்கிரின் ஷாட்கள் வைரலாக பரவியுள்ளது. இந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த இந்திய ரயில்வே சேவா, ஐஆர்சிடிசி கூகுள் நிறுவனத்திடம் தான் விளம்பர பகுதியை கொடுத்துள்ளது. அது அந்த ஆப்பை பயன்படுத்துவர்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய இணையதளம், அவர்கள் பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு விளம்பரங்களை வழங்குகிறது. அதனால் தாங்கள் உங்கள் பிரவுசரின் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரியை அழித்து விட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள் என பதிலளித்திருந்தது.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த நபர் எதை அடிக்கடி பார்க்கிறாரோ அது தான் அவருக்கு விளம்பரமாக வருகிறது என இந்தியன் ரயில்வேஸ் சேவா கூறியது. நெட்டிசன்களை சிரிக்க வைத்து விட்டது. பலர் இந்த ட்வீட்டில் ஆனந்த் குமாரை கிண்டல் செய்ய துவங்கிவிட்டனர்.
இதையடுத்து ஆனந்த்குமார் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும் இந்தியன் ரயில்வேஸ் சேவா ட்வீட்கள் இன்னும் இருக்கின்றன. அதில் பலர் ஆனந்த் குமாரைடேக் செய்து கிண்டலடித்து வருகிறனர். அவரது ஐடியையும் பிரைவேட்டில் வைத்துள்ளார். இதனால் அவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த கடந்த 2019ம் ஆண்டு அப்பொழுதே இந்த ட்வீட் எல்லாம் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போதும் இந்த ட்விட்டரின் ஸ்கிரின் ஷாட்கள் வைரலாக பரவியுள்ளது. இந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.