ஆப்நகரம்

UP Marriage : 60 வயது மூதாட்டியை திருமணம் செய்த 20 வயது இளைஞன்

உ.பியில் 20 வயது இளைஞன் 60 வயது மூதாட்டியை திருமணம் செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2020, 1:24 pm
உ.பி மாநிலம் ராம் பூரை சேர்ந்தவர் கேவர்த்தி 60 வயது மூதாட்டியான இவர் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷ் பால் என்ற 20 வயது இளைஞர் கேசவர்த்தி என்ற இளைஞர் கேசவர்த்தியின் செல்போனிற்கு தவறுதலாக போன் செய்துள்ளார்.
Samayam Tamil 60 வயது மூதாட்டியை திருமணம் செய்த 20 வயது இளைஞன்


இருவரும் செல்போனில் பேசிய போது ஒருவரது பேச்சு இன்னொருவருக்குப் பிடித்துவிட்டது. இவர்கள் யார் என்றே தெரியாவிட்டாலும் செல்வனிலேயே இவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு தினமும் பேசத் துவங்கினர்.

இந்த பேச்சு அடுத்ததாக விடியோ காலாக மாறியது. விடியோ காலில் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது. இந்நிலையில் கேசவர்த்தியை திருமணம் செய்ய ராகேஷ் முடிவு செய்தனர்.

Also Read : நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய டாப் 25 வித்தியாசமான உண்மைகள்

கேசவர்த்தியை அழைத்து தன் காதலைச் சொல்லி திருமணம் செய்து கொள்ள அவரிடம் கேட்டபோது அதற்கு கேசவர்த்தியும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து ராகேஷ் கேசவர்த்தியின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள மக்கள் முன்னிலையில் கேவர்த்தியை திருமணம் செய்து கொண்டார். 60 வயது மூதாட்டியை 20 வயது இளைஞர் திருமணம் செய்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த திருமணம் குறித்து சமூகவலைத்தளில் பேசி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அடுத்த செய்தி