ஆப்நகரம்

Chennai Police: சென்னையில் சுற்றி திரிந்த சூடான் இளைஞர்...! சொந்த காசில் சூடானிற்கே அனுப்பி வைத்த போலீஸ்...!

சுடான் நாட்டை சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மது அல் முஸ்தபா இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவிற்கு கல்லூரி படிப்பிற்காக வந்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2019, 3:57 pm
சுடான் நாட்டை சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மது அல் முஸ்தபா இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவிற்கு கல்லூரி படிப்பிற்காக வந்துள்ளார். நாகபட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். ஆனால் இவர் கடந்த 2016ல் முடிந்த கல்லூரி தேர்வுகளில் பெயில் ஆகிவிட்டார். மேலும் இவரது விசாவும், கடந்த 2017ம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. இந்நிலையில் 2016ல் சூடானிற்கு சென்று மீண்டும் தான் தோல்வியடைந்த தேர்வுகளை மீண்டும் எழுத இந்தியாவந்துள்ளார்.
Samayam Tamil சென்னையில் சுற்றி திரிந்த சூடான் இளைஞர்


ஆனால் தான் பெயில் ஆன தேர்வுகளை மீண்டும் எழுதவோ அல்லது வீட்டிற்கு செல்லவோ இவருக்கு பணமில்லை. இதனால் வேறு வழியே இல்லாமல் என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்தார். ஆதனால் வேறு வழியில்லாமல் சென்னையை நோக்கி வந்துள்ளார். சென்னை வந்த இவர் மெரினா கடற்கரையிலேயே சுற்றி திரிந்துள்ளார். அங்கேயே தங்கியுள்ளார்.
Read More: தண்ணீர் இல்லாமல் குளிக்க வேண்டும் மாணவிகளை ராக்கிங் செய்த கல்லூரி நிர்வாகம்

அங்கு சிலருடன் இவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு இவர் குறித்து விசாரிக்கும் போது, இவர் வீட்டிற்கு செல்ல காசு இல்லாமல் தவிப்பது தெரியவந்தது.

இதையடுத்து இவரது தண்டனை காலம் முடிந்ததும். டில்லியில் உள்ள சுடான் தூதரகத்தை தொடர்பு கொண்ட சென்னை போலீசார் அவரை மீண்டும் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். அவருக்காக சென்னை போலீசார் சிலர் இணைந்து அவர்களது சொந்த காசில் இருந்து ரூ70 ஆயிரம் செலவு செய்து, அவர் சூடான் செல்வதற்கான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளனர்.
Read More: "அயன்" பட பாணியில் போதை பொருள் கடத்த முயன்றவரை மார்க் போட்டு பிடித்த போலீஸ்


Read More: கர்நாடகா முதல்வர் காரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை...!
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு சுடான் சென்று மீண்டும் பரிட்சைக்கு இந்தியா திரும்பிய இங்கு தவித்து வந்த நிலையில் அவரை மீண்டும் சுடானிற்கு அனுப்பிய செய்தி வைரலாக பரவி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் இங்கு இருந்த காலத்தில் அழகாக தமிழ் பேச கற்றுக்கொண்டார்.

அடுத்த செய்தி