ஆப்நகரம்

330 கிலோ உடல் எடை கொண்டவரை வீட்டின் சுவரை உடைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ராணுவத்தினர்

சுமார் 330 கிலோ எடை கொண்ட நூர் ஹாசன் சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். இந்த சம்பவம் பாக்., ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதை பார்த்த பாக்., ராணுவ தலைமை ஜெனரல் குவாமத் ஜாவத் பாஜ்வா என்பவர் நூர் ஹாசனிற்கு சிகிச்சை பெற்று தர முன்வந்தார்.

Samayam Tamil 21 Jun 2019, 3:56 pm
பாகிஸ்தானில் உள்ள ஸாதிக்காபாத் பகுதியை சேர்ந்தவர் நூர் ஹாசன், இவர் உடல் நிலை திடீரென மோசமாகி தொடரந்து குண்டாகி கொண்டே வந்தார். இதனால் இவரால் வீட்டை விட்டே வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டு வாசல் வழியாக கூட வெளியே வர முடியாமல் தவிர்த்தார்.
Samayam Tamil 330 கிலோ உடல் எடை கொண்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ராணுவத்தினர்


சுமார் 330 கிலோ எடை கொண்ட நூர் ஹாசன் சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். இந்த சம்பவம் பாக்., ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதை பார்த்த பாக்., ராணுவ தலைமை ஜெனரல் குவாமத் ஜாவத் பாஜ்வா என்பவர் நூர் ஹாசனிற்கு சிகிச்சை பெற்று தர முன்வந்தார்.

அதற்காக அவரை பரிசோதனை செய்ய ராணுவ டாக்டர்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பினார். ஆனால் டாக்டர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் 330 கிலோ எடை கொண்ட தன் வீட்டில் இருந்தே வெளியே வர முடியாத ஒருவரை எப்படி வெளியே கொண்டு செல்வது என அவர்கள் யோசித்தனர். அதன் பின்பு ராணுவ ஜெனரலின் உத்தரவு படி இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

அதன் பின்பு பாக்., ராணுவத்தினர் வந்து நூர் ஹாசனின் வீட்டின் சுவரை உடைத்து அதை வெளியே தூக்கி வந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றி லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு 360 கிலோ இருந்தார் அதற்காக லாப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இவரது உடல் எடை 200 ஆக குறைந்தது. ஆனால் அது மீண்டும் கூட துவங்கி தற்போது 330 கிலோவிற்கு சென்றுவிட்டது. இதற்கான காரணம் தெரியாமல் டாக்டர்கள் திணறுகின்றனர்.

பாக்., நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 29 சதவீதமானோர் அதிகஎடை கொண்டவராகவும், 51 சதவீதமானோர் குண்டாக இருப்பவர்களாவே இருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

அடுத்த செய்தி