ஆப்நகரம்

4000 ஆண்டுகளுக்கு முந்தைய "ரோமியோ ஜூலியட்" ; நெஞ்சை உருக வைக்கும் காதல் ஜோடியின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

கஜகஸ்தான் நாட்டில் உள்ள காரகண்டா பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட காதலர்களின் எலும்பு கூடுகள் கிடைத்தது.

Samayam Tamil 31 Jul 2019, 5:50 pm
கஜகஸ்தான் நாட்டில் உள்ள காரகண்டா என்ற பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள், இறந்தவர்களை புதைக்கும் கல்லறையாக பயன்படுத்தியதை கண்டு பிடித்தனர்.
Samayam Tamil நெஞ்சை உருக வைக்கும் காதல் ஜோடியின் எலும்புகூடு கண்டுபிடிப்பு


அந்த பகுதியில் தோண்டி எடுத்து அதில் உள்ள எலும்பு கூடுகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அப்படியாக ஒரு கல்லறையை அவர்கள் தோட்டி எடுக்கும் போது அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Read More: "எனக்கு ஒரு இந்து தான் உணவு டெலிவரி செய்ய வேண்டும்" என கேட்ட வாடிக்கையாளருக்கு சோமாட்டோ கொடுத்த செருப்படி பதில்...!

அந்த எலும்பு கூடுகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது போல புதைக்கப்பட்டிருந்தன. இது ஆராயச்சியாளர்களுக்கு வியப்பை தந்தன. மேலும் அந்த எலும்பு கூடுகளுக்கு அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபாரணங்களும் கிடைத்தன.

இந்த எலும்பை அவர்கள் ஆய்வு செய்த போது அது நான்காயிரம் ஆண்டுகள் பழமையான 16,17 வயதுடையவர்களின் எலும்புகளாக இருக்கலாம் என கண்டறிப்பட்டுள்ளது. இளம் வயது என்பதால் காதல் தோல்வி அல்லது பிரச்னை காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஜாதிப்பிரச்னை காரணமாகவும் இவர்களுக்கு காதல் தோல்வி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Read More: துப்பாக்கி சுடும் போட்டியில் "தல" அஜித் ; டுவிட்டரில் #ThalaAJITHatRifleChampionship என கொண்டாடும் ரசிகர்கள்

4000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் காதல் தோல்வி/பிரச்சனை, ஜாதி பிரிவுகள் இருந்ததாக வெளியாகும் தகவல் பலரை ஆச்சிரியத்தை ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி