ஆப்நகரம்

சென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி; வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?

சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் நடந்த பிரியாணி சாப்பிடும் போட்டி குறித்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டி குறித்து முழு தகவல்களை கீழே காணுங்கள்.

Samayam Tamil 10 Dec 2019, 12:33 pm
சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் நடந்த பிரியாணி சாப்பிடும் போட்டி குறித்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டி குறித்து முழு தகவல்களை கீழே காணுங்கள்.
Samayam Tamil 5000 winning amount in a biryani eating competition at chennai hotel is going viral
சென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி; வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?


பிரியாணி

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வார இறுதி வந்துவிட்டால் பலருக்கு நாக்கு தானாக பிரியாணியை தேடிவிடும். பிரியாணியை பார்த்ததும் கைதி திரைப்படத்தில் கார்த்தி ரசித்து ருசித்து பிரியாணியை சாப்பிடுவது போல பலரும் பிரியாணியை சாப்பிட துவங்கிவிடுவார்கள்.

போட்டி

இந்நிலையில சென்னை அண்ணா நகரில் உள்ள பாரம்பரியம் என் தனியார் ஓட்டலில் 2 நிமிடங்களில் அதிக அளவு பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு ரூ5 ஆயிரம் பரிசு என அந்நிறுவனம் அறிவித்தது.

ஆர்வம்

அதற்கான போட்டி கடந்த வார இறுதியில் நடந்தது. பல இளைஞர்கள் போட்டிக்கொண்டு கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ பலருக்கு எப்படியாவது அந்த பிரியாணியை சாப்பிட வேண்டும் என விரும்பியே அந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

வெற்றி

போட்டி துவங்கியதும் பலர் ஒரு கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் மறு கையில் பிரியாணியுடன் களத்தில் இறங்கி வெளுத்து கட்டினர். இறுதியாக போட்டியின் முடிவில் ஊட்டியை சேர்ந்த ராகேஷ் எனும் இளைஞர் அதிகமான பிரியாணியை சாப்பிட்டு வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

பிரியாணி ராகேஷ்

இவர் பிரியாணியை சாப்பிடும்போதே வெண்ணிலா கபடி குழு புரோட்டா சூரியை போல பிரியாணியை வெளுத்து கட்டியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. போட்டியில் வெளுத்து கட்டிய "பிரியாணி ராகேஷை" பலர் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி