ஆப்நகரம்

75வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி..! - வியக்க வைக்கும் ஆச்சரியம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி குழந்தையை பெற்றெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழத்தியுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2019, 11:22 am
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதி பல நாட்களாக குழந்தையில்லாமல் இருந்தனர். அதனால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில் வயதான காலத்தில் இவர்களுக்கு என ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என கருதினார்.
Samayam Tamil 75வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி


இது குறித்து அவர்கள் தங்கள் டாக்டரிடம் பேசியபோது அவரது உடலை பரிசோதனை செய்துவிட்டு அந்த மூதாட்டிக்கு மாதவிடாய் வரவைத்து, அதன் பின் செயற்கை கருடவூட்டல் மூலம் அவரை கர்ப்பமானார்.

இந்நிலையில் அவர் 6.5 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது அவர் உடல் அளவிலும், மன அளவிலும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை உடல் நிலையை சீர் செய்ய டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இப்படியே சென்றால் குழந்தைக்கு தாய்க்கு ஆபத்து ஏற்படும் என கருதிய டாக்டர்கள் 6.5 மாதத்திலேயே குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.

Also Read : அரசு பேருந்தில் அனுமன் அடையாளம் - வைரலாகும் புகைப்படம்

இதையடுத்து அந்த மூதாட்டிக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டு 75 வயதில் மூதாட்டி அழகான பெண் குழந்தையை பெற்று தாயானார். தற்போது அந்த குழந்தை வெறும் 600 கிராம் எடையே இருப்பதால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

Also Read : பைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அபராதம் - வைரலாகும் வீடியோ

75 வயது மூதாட்டி முதன் முறையாக குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி