ஆப்நகரம்

ஆட்டிசம் பாதித்த மாணவனுக்கு கிடைத்த புதிய நட்பு...! - வைரலாகும் புகைப்படம்...!

அமெரிக்காவில் பள்ளி சென்ற ஆட்டிசன் பாதித்த மாணவனுக்கு கிடைத்த நட்பு குறித்த செய்தி அவர்களின் புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 29 Aug 2019, 5:57 pm

அமெரிக்காவில் உள்ள விசிட்டா பகுதியில் கடந்த 14ம் தேதி மின்னேஹா எனாற என்ற பள்ளி விடுமுறை முடித்துத் திறந்தது. இந்த பள்ளியில் காணர் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் 2ம் வகுப்பில் சேர்ந்திருந்தான். பள்ளியில் வகுப்பறை திறக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் இடத்தில் மற்ற மாணவர்களைப் பார்த்துப் பயந்த காணர் ஒரு மூலைக்குச் சென்று அழுது கொண்டிருந்தான்.
Samayam Tamil ஆட்டிசம் பாதித்த மாணவனை கிடைத்த புதிய நட்பு


இதைப் பார்த்த அதே வகுப்பில் படிக்கும் கிரிஸ்டியன் மூரே என்ற மற்றொரு மாணவன் காணரிடம் சென்று அன்பாகப் பேசி அவனைக் கையை பிடித்துத் திறக்கப்பட்ட வகுப்பறைக்குள் கூட்டிச் சென்றான். இதை அங்கிருந்த சில பெற்றோர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு நடந்த சம்பவத்தை எழுதியிருந்தனர்.


வைரல் வீடியோவால் வந்தது விணை..! சிக்கலில் சப் இன்ஸ்பெக்டர்...!

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் கிரிஸ்டியன் மூரேவை பயங்கரமாகப் பாராட்டினர்.

இது குறித்து காணரின் தாய் அளித்த பேட்டியில் : " என் மகன் வித்தியாசமான மனநிலையால் பள்ளியில் சிரமப்படுவான் என்பது எனக்குத் தெரியும். இதனால் நாம் மிகப்பெரிய கவலையிலிருந்தேன். ஆனால் கிரிஸ்டியன் மூரே என் கவலைகளை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டான். மூரேவிற்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன் " என்றார்.

பிரதமர் மோடி துவக்க வைத்த #FitindiaMovement - வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்

கிரிஸ்டியன் மூரேவின் தாய் கூறும் போது : "மூரேவிற்கும், காணாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது நல்ல நண்பர்களாகிவிட்டனர். மூரே போன்ற மகனைப் பெற்றதற்கு பெரும் பாக்கியம் செய்துள்ளேன்" எனக் கூறினார்.

ஆட்டிசம் உள்ள குழந்தைகளைப் பெரியவர்களே வித்தியாசமாக நடத்தி வரும் நிலையில் கிறிஸ்டியன் மூரே, காணரிடம் காட்டிய பாசம் பலரை வியக்க வைத்துவிட்டது.

அடுத்த செய்தி