ஆப்நகரம்

காற்று மாசின் அவலத்தை தான் வரைந்த ஒரே படத்தில் உணர்ந்திய 9 வயது சிறுமி

காற்று மாசு குறித்து 9 வயது சிறுமி வரைந்த ஓவியம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 6 Nov 2019, 10:57 am
நமது டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக இருப்பவர் சித்தார்த்தா ராய் இவர் சமீபத்தில் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றைச் செய்திருந்தார். அந்த பதிவு தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil டில்லி காற்று மாசு
Photo :



அவர் தனது 9 வயது மகள் டில்லி குறித்து வரைந்த ஓவியத்தை தற்போது ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் இதை என் 9 வயதுமகள் வரைந்துள்ளார். எனது மகள் இவ்வாறு தான் டில்லியைப் பார்க்கிறார். வானங்கள் க்ரே கலரில் இருக்கிறது. மக்கள் சாதாரணமாகவே மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். இவ்வாறான நகரத்தை நாம் குழந்தையாக இருந்த போது பார்க்கவில்லை ஆனால் இப்பொழுது நம் குழந்தைகளுக்கு நாம் இதைத் தான் விட்டுச் செல்கிறோம் எனப் பதிவு செய்திருந்தார்.

Also Read : வறுமையிலும் நேர்மை : இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது


Also Read : இவரை பார்த்தும் விராட் கோஹ்லி என நினைத்தால் இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்

தற்போது காற்று மாசு காரணமாக டில்லி மிகப் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லி முழுவதும் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி