ஆப்நகரம்

ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்க வெறும் கால்களில் 10 கிமீ பயணம் செய்யும் 87 வயது மருத்துவர்!

கோவிட் காலத்தில், ஏழை கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் அளிக்க, 10 கிமீ வெறும் கால்களில் பயணம் செய்த 87 வயது மருத்துவர்.

Samayam Tamil 23 Oct 2020, 4:54 pm
Image Source: ANI/Twitter
Samayam Tamil ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்க வெறும் கால்களில் 10 கிமீ பயணம் செய்யும் 87 வயது மருத்துவர்!


இந்த காலத்தில் மருத்துவமனை, மருத்துவர்கள் என்றாலே ரமணா திரைப்படம் கண்முன்னே ஓடுவது தான் நினைவிற்கு வருகிறது. 10ல் 8 பேர் மருத்துவத்தை ஒரு தொழிலாக தான் பார்க்கிறார்கள். காரணம், அவ்வளவு இலட்சங்கள் கொட்டி அவர்கள் படித்து வருகிறார்கள். மருத்துவம் மட்டும் தான் நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்பாக இருக்கிறது. இன்வெஸ்ட்மென்ட் அதிகம் என்பதால், ரிட்டர்ன்ஸ் வேகமாகவும், அதிகமாகவும் எடுக்கவே பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், பொதுவாக எடுத்துக் கொண்டால், மருத்துவம் என்பது இராணுவம் போன்ற சேவை. நினைத்து பாருங்களேன், நன்கு பயிற்சி பெற்ற ஒரு இராணுவ வீரர் அல்லது அதிகாரி, மக்கள் இலட்சங்களில் கொட்டிக்கொடுத்தால் தான் நாட்டை எல்லையில் நின்று காப்பேன் என்று கூறினால் என்ன ஆவது.

இங்கே நாம் அல்லா மருத்துவர்களையும் குறை கூட முடியாது. சிலர் நல்ல மனம் கொண்டுள்ளனர், நிஜமாகவே மருத்துவத்தை சேவையாக செய்கிறார்கள். ஐந்து கடவுளுக்கு நிகர். அப்படியான ஒரு மருத்துவர் குறித்து தான் இப்போது நாம் காணவிருக்கிறோம்.


சந்திரப்பூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதிய மருத்துவர் அவர். வெறும் கால்களில் சைக்கிளை 10 கிமீ தூரம் மிதித்து கொண்டு, ஊர் ஊராக சென்று, ஏழை கிராமப்புற மக்களுக்கு அவரவர் வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்து வருகிறார். இது ஏதோ, ஒரு நாள் இரண்டு நாள் என்று நினைத்து விடாதீர்கள். கடந்த 60 வருடங்களாக, தொடர்ந்து இந்த சேவையை செய்து வருகிறார் இந்த 87 வயது மருத்துவர்.

கோவிட் நாட்களில் கூட இவர் துவண்டுவிடவில்லை. இந்த காலத்தில் தான் அந்த ஏழை கிராமப்புற மக்களுக்கு மருத்துவ தேவை இன்னும் அதிகம் என்று உணர்ந்து, ஓய்வுறாமல் தனது சேவையை தொடர்ந்து செய்கிறார். இவருக்கு தேசமே தலைவணங்க வேண்டும். இவருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

அடுத்த செய்தி