ஆப்நகரம்

17 வயதில் முதலிரவு நடத்தி சிறுமியை சித்ரவதை செய்த காம கொடூரன் கைது..! பச்சிளம் குழந்தையும் பலியான பரிதாபம்...!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜோஸ்வா இவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளார். அப்பொழுது ஜோஸ்வா அந்த சிறுமியை ஏமாற்றி அவருடன் அவ்வப்போது உடலுறவு வைத்துள்ளார்.

Samayam Tamil 14 May 2019, 3:59 pm
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜோஸ்வா இவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளார். அப்பொழுது ஜோஸ்வா அந்த சிறுமியை ஏமாற்றி அவருடன் அவ்வப்போது உடலுறவு வைத்துள்ளார்.
Samayam Tamil 17 வயதில் முதலிரவு நடத்தி சிறுமியை சித்திரவதை செய்த காம கொடூரன் கைது


இதனால் சிறு வயதிலேயே அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவர அது பிரச்னையாகி ஜோஸ்வாவை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இது பிடிக்காமல் ஜோஸ்வா அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கும் போது அவரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த போதே இறந்து பிறந்தது. இதனால் அந்த சிறுமி மனதளவில் பெரும் பாதிப்பிற்குள்ளானார். கர்ப்பமாக இருந்த போது அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியதனாலும், அதனால் அந்த பெண் சரியாக சாப்பிடாமல் இருந்ததாலும் தான் குழந்தையும் இறந்து பிறந்ததாகவும், சிறுமியும் மனநலம் பாதிக்க அதுவும் முக்கிய காரணம் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து ஜோஸ்வா மீது அந்த சிறுமியின் வீட்டார் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி