ஆப்நகரம்

பிறந்தநாள் பார்ட்டியில் 14 வயது சிறுவனை 2முறை கற்பழித்த 33 வயது பெண்

அயர்லாந்து நாட்டில் உள்ள லாங்ஃபோர்டு என்ற பகுதியில் ஒரு சிறுவனுக்கு 16ம் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டிக்கு பலர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

Samayam Tamil 3 May 2019, 6:00 pm
அயர்லாந்து நாட்டில் உள்ள லாங்ஃபோர்டு என்ற பகுதியில் ஒரு சிறுவனுக்கு 16ம் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டிக்கு பலர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் கிம்பர்லி ஏபெல்(33) என்ற பெண்ணும் கலந்து கொண்டார். பிறந்தநாள் பார்ட்டியின் போது மது விருந்தும் வழங்கப்பட்டது.
Samayam Tamil பிறந்தநாள் பார்ட்டியில் 14 வயது சிறுவனை 2முறை கற்பழித்த 33 வயது பெண்


அதில் கிம்பர்லி ஏபெல் அதிகமாக மது அருந்தினார். மது போதையிலேயே அந்த பார்ட்டிக்கு வந்திருந்த 14 வயது சிறுவனிடம் பேசி கொண்டிருந்தார். அவர்கள் பேச்சு செக்ஸ் பக்கம் சென்றதும் ஏபெல்லிற்கு அந்த சிறுவன் மீது செக்ஸ் மோகம் வந்துவிட்டது.
Read more: விவாகரத்தான மனைவியின் பெண்ணுறுப்பில் சூடுபோட்ட முன்னாள் கணவன்

இதனால் ஏபெல் அந்த சிறுவனுடன் 2 முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார். அயர்லாந்து நாட்டு சட்டப்படி 16 வயதை கடந்தவர்தான் உடலுறவு மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் ஏபெல் கலந்து கொண்ட பிறந்தநாள் பார்ட்டி 16 வயதை கடந்த ஒரு சிறுவனின் பிறந்தநாள் பார்ட்டி என்பதால் இந்த சிறுவனிற்கும் 16 வயதை கடந்திருக்கும் என கருதி மது போதையிலேயே 14 வயது சிறுவனிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்.
Read More: மனைவியை ஆன்லைன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்...! கேரளாவில் திடுக் சம்பவம்

இந்நிலையில் அந்த 14 வயது சிறுவனின் தாய் தற்போது ஏபெல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி