ஆப்நகரம்

கர்ப்பிணியாக பிறந்த பெண் குழந்தை..! கருவுக்குள் கரு சென்ற அதிசயம்

அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பிப். 22ம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை வளர்ந்து வருவது சமீபத்தில் தெரியவந்தது.

Samayam Tamil 22 Mar 2019, 3:56 pm
அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பிப். 22ம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை வளர்ந்து வருவது சமீபத்தில் தெரியவந்தது.
Samayam Tamil a woman in colombia gave birth to a baby girl twin inside a twin
கர்ப்பிணியாக பிறந்த பெண் குழந்தை..! கருவுக்குள் கரு சென்ற அதிசயம்


அதாவது ஒரு தாய் கருவுற்று இருக்கும் போதே அந்த அந்த கருவிற்குள் வேறு ஒரு கரு உருவாகியுள்ளது.

இவ்வாறான பிறப்புகள் மிகவும் அரிதிலும் அரிதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இது போன்று கருவிற்குள் ஒரு கரு உருவாவகுவது இந்தியா மற்றும் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.
Read More: உயிரை கொடுத்து தொடர்ந்து 5 மணி நேரம் "மாராத்தான் செக்ஸ்"செய்த பெண்...!

இந்நிலையில் அமெரிக்காவில் கருவிற்குள் கருவை கொண்ட குழந்தை பிறந்தது. அதன் பின்னும் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதனால் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கருவில், கை, கால்,தலை, இதயம் ஆகிய உறுப்புகள் உருவாகியிருந்தன.
Read More: கல்யாண வீட்டு பந்திக்கு கல்லூரி மாணவர்கள் ரெகுலர் அட்டென்டென்ஸ்...! ஃபுல் கட்டு கட்டுவதாக புகார்...!

கருவிற்குள் கரு உருவாகும் இந்த முறை பிறப்பு குறைத்து 1808 ம் ஆண்டே ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்த முறையான கரு உருவானால் இரண்டாது கருவை காப்பாற்றுவது மிகுந்த சிரமமான விஷயமாகும். ஒவ்வொரு 5 லட்சம் வித்தியாசமான பிறப்பில் ஒரு பிறப்பாக இந்த பிறப்பு இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாலளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி