ஆப்நகரம்

Saaho :செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த "தீவிர" ரசிகர்

தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பிரபாஸின் திவிர ரசிகர் அவரை பார்க்க வேண்டும் எனக் கோரி செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்

Samayam Tamil 12 Sep 2019, 8:18 am

தெலுங்கானா மாநிலம் ஜாங்கம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவரில் திடீரென நேற்று ஒரு நபர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்தனர்.
Samayam Tamil செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தீவிர ரசிகர்



அடக்க முடியாமல் சிரித்த பெண்ணின் வாய் அப்படியே நின்று போனது! - வைரலாகும் புகைப்படம்

அவர் வந்து அந்த இளைஞருடன் பேசும் போது தற்கொலை முயற்சிக்காக அவர் சொன்ன காரணம் தான் மிக காமெடியான விஷயமே. செல்போன் டவரின் மீது ஏறியவர் நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகராம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான சாஹூ திரைப்படத்தைப் பார்த்த பின்பு டவரின் மீது ஏறியவருக்கு பிரபாஸை பார்க்க வேண்டும் என ஆர்வம் அதிகரித்ததாகவும்.

பலமுறை பிரபாஸை பார்க்க முயற்சி செய்தும் அவரால் பார்க்க முடியவில்லை என்பதால் பிரபாஸை பார்க்க வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறி, அதைக் கட்டுப்படுத்த முடியாமல் செல்போன் டவரின் மீது ஏறிவிட்டார்.

130 கீ.மீ., வேகத்தில் செல்லும் போது காற்றில் பறந்த செல்போனை சாதூர்யமாக பிடித்த நபர் - வைரலாகும் வீடியோ

பின்னர் போலீசார் செல்போன் டவரில் மீது ஏறியவரிடம் பக்குவமாகப் பேசி அவரை டவரில் இருந்து இறக்கினர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி