ஆப்நகரம்

Viral Video : அட...! இந்த மாட்டுக்கு இருக்குற அறிவு கூட சில மனிதர்களுக்கு இல்லாம போச்சே...

மாடு ஒன்று டிராபிக் சிக்னலுக்காக நிற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 9 Oct 2019, 1:22 pm
இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது டிராபிக் ஜாம் தான். அதுவும் குறிப்பாக டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களைக் கேட்கவே வேண்டாம், மனிதர்களின் பொறுமையைச் சோதிக்கும் இடமே இது தான்.
Samayam Tamil இந்த மாட்டுக்கு இருக்குற அறிவு கூட சில மனிதர்களுக்கு இல்லாம போச்சே


இப்படியாக இந்த டிரபிக் ஜாம்களுக்கு மத்தியில் டிராபிக்கை மதிக்காமல் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தியாவில் டிராபிக் விதிமுறைகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்படாததால் மக்கள் இஷ்டத்திற்கு டிராபிக் விதிகளை மீறுவது வாடிக்கையாகிவிட்டது.

Also Read : கடைசியில் மண்டை மீது இருந்த கொண்டையை மறந்து போன திருடன்...!

இந்நிலையில் மனிதர்களே டிராபிக் சிக்கல்களைப் பல தடவை மதிக்காமல் செல்லும் நிலையில் ஒரு மாடு ஒன்று நெரிசல் சிக்கலை மதித்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகை பிரீத்தி ஜிந்தா வெளியிட்ட இந்த வீடியோ வெறும் 9 நொடிகளே இருந்தாலும் அதில் உள்ள விஷயம் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். அதில் பலர் மனிதர்களே மதிக்காத போக்குவரத்து விதிகளை விலங்குகள் மதிப்பதாகக் கருத்திட்டு வருகின்றனர். .


Also Read : திருச்சியில் CCTVயில் சிக்காமல் இருக்க தலையில் குப்பை தொட்டியுடன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் - எவ்வளவு திருடினார்கள் தெரியுமா?



அடுத்த செய்தி