ஆப்நகரம்

சேலம் போலீசாரின் ட்ரோன் வீடியோவும் செம வைரல்

திருப்பூரையடுத்து சேலம் போலீசாரின் ட்ரோன் வீடியோவும் செம வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 17 Apr 2020, 1:32 pm
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாசிய தேவைகளை தவிர்த்து மற்ற எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
Samayam Tamil salem police Drone Video


இப்படிய திருப்பூர் போலீசார் வெளியிட்ட வீடியோவில் ஒரு தரத்தடியில் கேரம் போர்டு விளையாட்டிக்கொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டம் ட்ரோம் படம் பிடிப்பதை பார்த்து சிதறி ஓடியது. அதில் ஒருவர் மட்டும் கேரம் போர்டை தூக்கி கொண்டு ஒரு ஒரு கட்டத்தில் கேரம் போர்டிற்கு பின்னால் ஒளிந்து கொண்டார். இந்த வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவை வைத்து பல மீம்களும் வெளியாக துவங்கின. இந்த மீம்ஸ் பெரிய அளவில் வைரலாகியது.


Also Read : ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....

தற்போது இந்த வீடியோவை போலவே சேலம் போலீசார் வெளியிட்ட ஒரு வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் சில இளைஞர்கள் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர் ட்ரோன் வருவதை பார்த்ததும் அவர்கள் தெரித்துஓடினர். அதில் ஒருவன் தன் லுங்கி உள்ளேயே ஒளிந்து கொள்கிறான். இன்னொருவன் மரத்திற்கு பின்பு ஒளிந்து கொள்கிறான். ஒருவர் மரக்கொப்புகளை ஒடித்து அதன் பின்னால் ஒளிந்து கொள்கிறான். இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி