ஆப்நகரம்

காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போக போகிறதா? திடீர் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ராயப்பன் ஜெயமணி என்பவர் ஒரு போஸ்டர் ஒன்றை அச்சிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வருகிறார்.

Samayam Tamil 5 Jun 2019, 11:19 am
திருநெல்வேலி மாவட்டத்தில் ராயப்பன் ஜெயமணி என்பவர் ஒரு போஸ்டர் ஒன்றை அச்சிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வருகிறார். அதில் அவர் விரைவில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் வேறு வேறு பணம் வைத்திருப்பதை மாற்றி உலகம் முழுவதும் ஒரே பணமாக மாற்ற திட்டமிட்டு வருவதாகவும். இந்தியாவில் காந்தி படம் பொறிக்கப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போகும்.
Samayam Tamil காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போக போகிறதா


இந்த அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் எனவும், அதனால் மக்கள் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு தென்னை, மாடு, என உணவு தயாரிக்கும் பொருட்களாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டுள்ளார். மேலும் அவர் அந்த போஸ்டரில் ஒட்டு மொத்த உலகத்திற்கான புதிய ரூபாய் நோட்டுகளை இஸ்ரோ 666 வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பீதியை கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டரால் மக்கள் பீதியில் உள்ளனர். எந்த வித ஆதாரமும் இல்லாமல் மக்களை பீதிக்குள்ளாவது மிகவும் கண்டிக்கத்தக்கது, இந்த போஸ்டரை ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி