ஆப்நகரம்

அமெரிக்கர்களிடம் குறும்பு செய்த எலிசெபத் ராணி - வைரலாகும் தகவல்

இங்கிலாந்து ராணி வாக்கிங் செல்லும்போது அவரை அறியாத சுற்றுலா பயணிகள் சிலர் அவரை பற்றி அவரிடமே விசாரித்த சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 5:19 pm

இங்கிலாந்தின் ராஜபரம்பரை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் தற்போது அந்த அரச குடும்பத்தின் 2-ம் எலிசெபத் உயரிய அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து சிலர் சுற்றுலாவிற்காக இங்கிலாந்து சென்றனர். அவர்கள் அவர்கள் யாரும் ராணியை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதன் பெயரில் ராணி வசிக்கும் இடத்திற்குச் சென்ற அவர்கள் அங்குச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Samayam Tamil அமெரிக்கர்களிடம் குறும்பு செய்த எலிசெபத் ராணி


அப்பொழுது ராணி அந்த வழியாக நடைப் பயிற்சிக்குச் சென்றார். அப்பொழுது அவரை ராணி என அரியாத சுற்றுலாப் பயணிகள் அவரிடம் சென்று இது தான் ராணி வசிக்கும் இடமா? நீங்கள் அவரை பாரத்திருக்கீறர்களா? என்று எல்லாம் கேள்வி கேட்டுள்ளனர்.

ரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ23 ஆயிரம் அபராதம்

இதற்கு ராணி குறும்பாக இது ராணி இருக்கும் இடம் தான். அவரை நான் பார்த்தது இல்லை. அந்த போலீஸ் காரர் தான் பார்த்திருக்கிறார் என தனக்குக் காவலுக்கு வந்த போலீஸ் காரரைக் காட்டியிருக்கிறார். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பாதாள அறைக்குள் பல கோடி...! சிக்கிய விவசாயி பகீர் தகவல்...!

ராணியாக இருப்பவர் யார் என்றே தெரியாமல் ராணியிடமே சென்று ராணி குறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் விசாரித்தபோது அதற்கு ராணி குறும்பாகப் பதிலளித்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி