ஆப்நகரம்

தயவு செய்து கொஞ்சம் மிருகத்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்...! ; மனிததன்மை எல்லாம் வேண்டாம்...!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த பகுதியில் தனக்கான உணவை தேடிக்கொண்டிக்கும் மாதிரியான படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

Samayam Tamil 4 Jun 2019, 3:30 pm
கடந்த சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த பகுதியில் தனக்கான உணவை தேடிக்கொண்டிக்கும் மாதிரியான படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் விலங்குகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை உருவாக்குகிறது.
Samayam Tamil தயவு செய்து கொஞ்சம் மிருகத்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்

இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் காடுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் "காடுகளில் மிருகங்கள் எந்த பிளாஸ்டிக் குப்பைகளையும் போடுவதில்லை. மனிதர்கள் தான் போடுகிறார். அதனால் மிருங்களை போல நடந்து கொள்ளுங்கள் " என எழுதப்பட்டிருந்தது.

இதை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா அதில் "நான் சிறுவனாக இருக்கும்போது எனது சேட்டையால் கோபமடையும் என் அம்மா மிருகத்தை போல நடந்து கொள்ளாதே என திட்டுவார். இப்பொழுது அவரிடம் நான் சரியாக தான் நடந்து கொண்டேன் என தெரிவிக்க விரும்புகிறேன்" என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த டுவிட்கள் வைரலாகி வருகிறது. காடுகளில் வாழும் மிருகங்கள் குறித்து நமக்கு பெரிய அளவில் கவலைகள் இருந்ததில்லை. ஆனால் நாம் அலட்சியமாக செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட அதற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது ரிதியிலான கமெண்ட்களை அவரது டுவிட்டிற்கு பலர் பதிலளித்து வருகின்றனர். அதில் சிலவற்றை கீழே காணலாம்.






அடுத்த செய்தி