ஆப்நகரம்

தையல் மிஷினிலேயே ஓவியம் வரைந்து அசத்தும் கலைஞன் ; இவரது உலக சாதனையை பார்த்தால் அசந்து போவீர்கள்...!

நீங்கள் உலகில் பல விதமான ஓவியர்களைப் பார்த்திருப்பீர்கள் ஒவ்வொரு ஓவியரின் ஓவியமும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் ஆனால் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகும் ஓவியரின் ஓவியம் வரையும் முறையே மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

Samayam Tamil 13 Nov 2019, 7:44 pm
நீங்கள் உலகில் பல விதமான ஓவியர்களைப் பார்த்திருப்பீர்கள் ஒவ்வொரு ஓவியரின் ஓவியமும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் ஆனால் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகும் ஓவியரின் ஓவியம் வரையும் முறையே மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
Samayam Tamil arun kumar bajaj is the only worlds sewing machine painter
தையல் மிஷினிலேயே ஓவியம் வரைந்து அசத்தும் கலைஞன் ; இவரது உலக சாதனையை பார்த்தால் அசந்து போவீர்கள்...!


நீடில் மேன்

இவரை மக்கள் உலகின் "நீடில் மேன்" என் அழைக்கிறார்கள். இவர் தனது தையல் மிஷினை பயன்படுத்திய துணிகளை மிகச் சிறந்த ஓவியங்களை வரைகிறார். நிச்சியமாக இதைப்பார்த்து நீங்கள் அசந்து போவீர்கள்.

Twitter-Arun Kumar Bajaj – schilder met een naamachine - h...

பஞ்சாப் ஓவியன்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த அருண் பஜாஜ் என்பவர் தையல் கலைஞராக இருக்கிறார். 35 வயதாகும் இவர் கடந்த குருநானக் ஜெயந்தி அன்று இவர் தனது தையல் மிஷினில் குருநானக் ஓவியம் வரைந்தார். இந்த ஓவியம் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகப் பரவியது.

Twitter-This paintings are not painted at all In fact, thi...

மோடி ஓவியம்

இவர் இப்பொழுது மட்டும் பிரபலமல்ல இவர் கடந்த 2017ம் ஆண்டே பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் துணியில் தையல் மிஷின் மூலமாக வரைந்து பிரபலமானவர். அந்த உடையை அவர் பிரதமர் மோடிக்கு நேரிலேயே பரிசளித்துள்ளார்.

Twitter-TRIVIA 0001249: Did you know that an Indian named ...

தையல் ஓவியன்

மேலும் இவர் பல்வேறு விதமான தனித்துவமான ஓவியங்களை இவ்வாறு தையல் மிஷினில் வரைந்து லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Twitter-@SrBachchan Arun Kumar Bajaj जी ने सिलाई मशीन द्वा...

கிருஷ்ணர் ஓவியம்

இவரது மிக முக்கியமான சாதனைகளில் கிருஷ்ணரின் பிரபலமான புகைப்படத்தைத் துணியில் வரைந்தது தான். இதற்காக இவர் 28 லட்சத்து 36 ஆயிரம் மீட்டர் நூல்களைப் பயன்படுத்தியுள்ளார். லட்சக்கணக்கான நூல்களைப் பயன்படுத்தி உலகில் வரையப்பட்ட ஓவியம் இது ஒன்று தான். இந்த ஓவியத்தை நீங்கள் மேல உள்ள புகைப்படத்தில் அருணிற்கு பின்புறம் பார்க்கலாம்.

12 வயதிலேயே தையல்

இவ்வளவு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த அருணின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. அவர் தனது 12 வயது முதல் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 23 ஆண்டு அனுபவத்திற்குப் பின்பே அவரால் இதைச் செய்ய முடிந்தது.

கடினமான வாழ்க்கை

இவரது 16 வயதில் இவரது தந்தை இந்த உலகை விட்டு மறைந்து போக இவர் தான் தன் குடும்ப பொறுப்பைத் தையல் தொழில் மூலம் சுமக்கத் துவங்கினார். சிறுவயதில் தான் சிறந்த ஓவியனாக வரவேண்டும் என்ற ஆசை தவிடு பொடியாகிப் போன சூழ்நிலையில் தான் இவர் அந்த கனவை இவ்வாறு நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

அடுத்த செய்தி