அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பிரதமர் மோடிக்கும் அம்மாநில முதல்வர் ஹிமான்தா பிஸ்வா சர்மா என்பவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதினர். இதில் அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த மேட்டர் தான் காமெடியே. ரிஸ்வா என்ற 6 வயது சிறுவனும் ஆர்யன் என் 5 வயது சிறுவனும் சகோதரர்கள் இவர்கள் இருவரும் சமீபத்தில் இரண்டு தனித்தனி லெட்டர்களை முதல்வருக்கும் பிரதமருக்கு எழுதிய விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்களுக்கான பால் பல் விழுந்துவிட்டது, அடுத்த பல் முளைக்கவில்லை அதனால் அவர்களால் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட முடியவில்லை. இதை ஒரு புகாராக தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் அவர்கள் முதல்வர் மற்றும் பிரதமரிடம் தங்கள் பல் வளரவில்லை எனவும் அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
அதில் அவர்கள் முதல்வர் மற்றும் பிரதமரிடம் தங்கள் பல் வளரவில்லை எனவும் அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்