ஆப்நகரம்

இரவில் பேயாக மாறியதா குழந்தை? வைரலாகும் புகைப்படம்

குழந்தையின் முகம் இரவு நேரம் பேய் போல மாறியதாக வெளியான ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைபடம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 18 Nov 2019, 5:37 pm
வெளிநாடுகளில் உள்ள பெற்றோர்கள் தற்போது குழந்தைகளைப் பராமரிப்பது தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் இடங்களில் கேமராக்களை பொருத்தி அதன் மூலம் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.
Samayam Tamil இரவில் பேயாகா மாறியதா குழந்தை
Image Credits :


இந்நிலையில் ட்வீட்டரில் ஒருவர் செய்த பதிவில் கூறியிருப்பதாவது தனது குழந்தையைக் கண்காணிக்கும் வகையில் குழந்தை தூங்கும் பகுதியில் கேமரா ஒன்றைப் பொறுத்திருந்தார். அதில் அவர் இரவில் தூங்காமல் குழந்தை விழித்த போது கண்கள் பார்க்க வெள்ளையாகவும், அதே நேரத்தில் மூக்கு பகுதி கருப்பாகவும் இருந்துள்ளது.

இதை பார்த்த அவர் முதலில் பயந்துள்ளார். பின்னர் இது இரவில் வெளிச்சம் இல்லாததால் கேமராவில் உள்ள பிரச்சினை என்பதை உணர்ந்தார். ஆனால் கேமராவில் பதிவான காட்சி படி அந்த குழந்தை பார்க்கப் பேய் குழந்தை போலவே இருந்தது.

Also Read : பொம்மைக்குள் புகுந்த பேய்... தானாக வளரும் முடி...! 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத மர்மம்

இதை புகைப்படத்தை விஷயம் தெரியாதவர்கள் பார்த்தால் இந்த குழந்தையைப் பேய் குழந்தை என்றே நினைத்துவிடுவர். ஆனால் கேமரா குறித்த விஷயம் தெரிந்தவர்களுக்குத்தான் இது கேமராவில் இரவு நேரங்களில் பதிவாகும் சாதாரண விஷயம் என்பது புரியும். இதை அவர் ட்வீட்டரில் பதிவு செய்து கேமரா வைத்தது தவறு எனப் புரிந்து கொண்டேன் எனப் பதிவு செய்திருந்தார்.


Also Read : பேய்கள் குடியிருக்கும் கோட்டை... இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்களின் திகில் பின்னணி...!

இந்த பதிவு வைரலாகியது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இந்த புகைப்படத்தை லைக் செய்து கமெண்ட் செய்துவருகின்றனர். இந்த புகைப்படம் குறித்த உங்கள் கமெண்ட்டை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

அடுத்த செய்தி