ஆப்நகரம்

காதலியையும் மனைவியையும் ஒரே மேடையில் திருமணம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்; வைரலாகும் புகைப்படம்

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா, இவர் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது ஆனால் குழந்தைகள் இல்லை.

Samayam Tamil 21 May 2019, 4:21 pm
சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா, இவர் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது ஆனால் குழந்தைகள் இல்லை.
Samayam Tamil காதலியையும் மனைவியையும் ஒரே மேடையில் திருமணம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்


இந்நிலையில் விடுமுறைக்காக அணில் சொந்த ஊருக்கு வரும் போது எல்லாம் அவர் வீட்டில் அருகே உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். தன் மனைவியை விட அந்த பெண்ணுடன் தான் அதிக நேரத்தை செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் தன் மனைவி மூலம் குழந்தை பிறக்காததால் அணில் தன் அங்கன்வாடி காதலியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு அவரது முதல் மனைவியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவரோ முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தனது காதலியையும் மனைவியையும் ஒரே மேடையில் வைத்து இருவரையும் திருமணம் செய்தார். அதாவது மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இந்த செய்தி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கூறும்போது : "சட்டப்படி முதல் மனைவி இருக்கும்போது அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்வது தவறு. அரசு ஊழியர்கள் இவ்வாறு செய்ய அனுமதியில்லை. அவர் எந்த ஜாதி ,மதம், என யாராக இருந்தாலும் தனக்கு திருமணமான பின் தனது துணை இருக்கும்போது வேறு ஒருவரை மணக்க முடியாது. அவ்வாறு செய்தால் அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படும். இந்த சம்பவம் குறித்து சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தும்" என கூறினார்.

அடுத்த செய்தி