ஆப்நகரம்

அடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்... ஒரே ஆண்டில் 3 குழந்தை பிறந்த கதை

வங்கதேச நாட்டில் ஒரு பெண் ஒரே நேரத்தில் இரட்டை கர்ப்பமாகி அடுத்தடுத்த மாதங்களில் மொத்தம் 3 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 7 Jan 2020, 12:02 pm
வங்கதேச நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியை அடுத்த ஷார்ஷா பகுதியைச் சேர்ந்த பெண் அரிபா சுல்தானா இவருக்குக் கடந்த ஒரு ஆண்டிற்குப் பின் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் இவர் கர்ப்பமானார்.
Samayam Tamil double pragnancy


இதனால் இவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்துவந்தார். ஒரு கட்டத்தில் அரிபாவை ஸ்கேன் செய்தது பார்த்த டாக்டர் அரிபா இரட்டை கர்ப்பம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இரட்டை குழந்தை தெரியும் அது இரட்டை கர்ப்பம் எனக் குழப்புகிறீர்களா?

Also Read : இந்திய கப்பலை தாக்க வந்த நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந்திய கடற்படை... அடுத்து நடந்தது?

பெண்ணின் உடலுக்குள் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்து இரண்டும் ஒரே நேரத்தில் கர்ப்பமாவது தான் இரட்டை கர்ப்பம் என மருத்துவ உலகில் அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு. அரிபா அந்த முறையில் கர்ப்பமாகியிருந்தார்.

இதையடுத்து அரிபாவிற்கு கடந்த மாதம் பிரசவ வலி ஏற்பட்டது. அப்பொழுது ஒரு கர்ப்பப்பையில் இருந்த ஆண் குழந்தை பிறந்தது மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் முதல் குழந்தை பிறந்து சுமார் 1 மாதம் கழித்து அடுத்த கர்ப்பப்பையிலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

மருத்துவ உலகில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் அதுவும் ஒரு மாத இடைவெளிக்குப் பின் பிறக்கும் நிகழ்வு மிகவும் அபூர்வமானது. இந்த நிகழ்வு குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி